பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 254 

   பொருந்தும். இஃது சீவனுடைய உட்கோள். இனி, 'போலா' எனச் செய்யாவென்னும் எச்சவினையாக்கிப் 'போன்று அவன் ஆக' என முடிபு செய்வர் நச்சினார்க்கினியர். 'போலாம்' என்னும் பாடமும் அவருக்கு உடன்பாடே. 'போல்' என்பது உவமையுணர்த்தியது; ஒப்பில் போலி அன்று.

( 35 )
444 போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப்
  புரவி பண்ணித்
தோ்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப்
  பகழி யாய்ந்து
கார்க் கொண்மு மின்னி னிமிர்ந்தான்கலி
  மான்கு ளம்பிற்
பார்க்கண் ணெழுந்த துகளாற் பகன்
  மாய்ந்த தன்றே.

   (இ - ள்.) போர்ப்பண் அமைத்து - தன்னைப் போருக்கு ஈடாக்கிக் கெண்டு; புரவி பண்ணி நுகம்பூட்டித் தேர்ப்பண் அமைத்து - குதிரைகளைப் புனைந்து நுகத்திலே பூட்டித் தேரைப் புனைந்து; சிலை கோலிப் பகழி ஆய்ந்து - வில்லை வளைத்துக் கணைகளை ஆராய்ந்து; கார்க் கொண்மு மின்னின் நிமிர்ந்தான் - கரிய முகிலிடையே மின்னெனத் தேரைச் செலுத்தினான்; கலிமான் குளம்பின் பார்ப்பகண் எழுந்த துகளாற் பகல் மாய்ந்தது - முழங்குங் குதிரைகளினுடைய குளம்பினாலெழுந்த புழுதியால் ஞாயிறு மறைந்தது.

 

   (வி - ம்.) கொண்மூ : கொண்மு என ஆனது விகாரம்.

 

   போர் பண்ணமைத்து என்றது, போருக்குத் தகுதியாகத் தன்னை யாக்கிக் கொண்டென்றவாறு. அஃதாவது கழல்கட்டிப் படைக்கலமேந்தி இன்னோரன்ன பிறவும் செய்து கோடல். சிலை - வில். கோலுதல் - அதனை வளைத்துக் காண்டல். கலிமான் - குதிரை. பகல்: ஆகுபெயர்; ஞாயிறு.

( 36 )
445 இழுதொன்று வாட்க ணிளையாரிளை
  யார்க ணோக்கிற்
பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில்
  வல்ல காளை
முழுதென்று திண்டோ் முகஞ்செய்தவன்
  றன்னொ டேற்கும்
பொழுதன்று போது மெனப்புண்மொழிந்
  தான்மொ ழிந்தான்.