பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 271 

யுடைய புலி போன்ற சீவகன்; கொழுநிதிப் புரிசை புக்கான் - வளமிகு செல்வமுடைய தன் மனையக மதிலுக்குள்ளே புகுந்தான்.

 

   (வி - ம்.) கோட்டுதல் - வளைத்தல். தோன்றல் - சீவகன். மகளிர்க்குரிய நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கனுள் முன்னிற்பதாகலின் நாண்முதற் பாசம். புரிசை : தன் மனைமதில்.

( 62 )
471 பொன்னுகம் புரவி பூட்டு
  விட்டுடன் பந்தி புக்க
மன்னுக வென்றி யென்று
  மணிவள்ள நிறைய வாக்கி
யின்மதுப் பலியும் பூவுஞ்
  சாந்தமும் விளக்கு மேந்தி
மின்னுகு செம்பொற் கொட்டில்
  விளங்குதோ் புக்க தன்றே.

   (இ - ள்.) புரவி பொன் நுகம் பூட்டு விட்டு உடன் பந்தி புக்க - குதிரைகள் பொன் நுகத்திலிருந்து பூட்டு நீங்கி உடனே தம் பந்தியிலே புகுந்தன; மணி வள்ளம் நிறைய இன்மதுவாக்கி - மாணிக்கக் கிண்ணம் நிறைய இனிய மதுவை வார்த்து; பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் - அம் மதுவாகிய பலி முதலியவற்றை; வென்றி மன்னுக என்று ஏந்தி - வென்றி நிலை பெறுக என்று ஏந்த; விளங்குதேர் மின் உகு செம்பொன் கொட்டில் புக்கது - ஒளிவிடும் தேர் விளக்கமான செம்பொன் கொட்டிலிலே புகுந்தது.

 

   (வி - ம்.) விளக்குமேந்தி என்புழி செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.

( 63 )
472 இட்டவுத் தரிய மெல்லென்
  றிடைசுவல் வருத்த வொல்கி
யட்டமங் கலமு மேந்தி
  யாயிரத் தெண்ம ரீண்டிப்
பட்டமுங் குழையு மின்னப்
  பல்கல னொலிப்பச் சூழ்ந்து
மட்டவிழ் கோதை மாதர்
  மைந்தனைக் கொண்டு புக்கார்.

   (இ - ள்.) மட்டு அவிழ் கோதை மாதர் ஆயிரத்தெண்மர் ஈண்டி - தேன் விரியும் மாலையணிந்த மங்கையர் ஆயிரத்தெண்மர்