| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
330 |
|
|
(வி - ம்.) 'மின்னுக் கொடி' எனப் பொருட்பெயர்க்கும் உகரமும் வல்லெழுத்துப் பேறும் (தொல். புள்ளி மயங். 50) இலேசாற்கொள்க.
|
|
|
புல்லி - புல்ல எனத் திரித்து; 'இறைஞ்சலும் அடுத்தனன் புல்ல. (அவள் சென்று) தோழியர் குழாத்துள் நிற்ப, ஆற்றுகிலாது சொன்னான்' என மாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
|
( 70 ) |
| 563 |
வலம்புரி யீன்ற முத்தம் |
| |
மண்மிசை யவர்கட் கல்லால் |
| |
வலம்புரி பயத்தை எய்தா |
| |
தனையரே மகளி ரென்ன |
| |
நலம்புரிந் தனைய காதற் |
| |
றேவிதன் னவையை நீங்கக் |
| |
குலம்புரிந் தனைய குன்றிற் |
| |
கதிபதி கூறி னானே. |
|
|
(இ - ள்.) வலம்புரி ஈன்ற முத்தம் மண்மிசையவர்கட்டு அல்லால் - வலம்புரிச் சங்கு தந்த முத்து நிலமிசை வாழ்வார்க்கேயன்றி; வலம்புரி பயத்தை எய்தாது - வலம்புரி அம்முத்தின் பயனை அடையாது; மகளிர் அனையரே என்ன - பெண்களும் தங்கள் தாயருக்கு அத்தன்மையரே என்று; நலம்புரிந்த அனைய காதல் தேவிதன் நவையை நீங்க - நன்மையே ஒரு வடிவு கொண்டாற் போன்ற காதலையுடைய தன் மனைவி தன் வருத்தத்தைவிட; குலம் புரிந்த அனைய குன்றிற்கு அதிபதி கூறினான் - நற்குலமே ஒரு வடிவு கொண்டாற் போன்ற வெள்ளிமலைத் தலைவன் கூறினான்.
|
|
|
(வி - ம்.) இச் செய்யுளின்கண் தேவர்,
|
|
| |
”சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை |
|
| |
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் |
|
| |
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.” |
|
|
என வரும் பாலைக்கலிக் (9-15-17) கருத்தினைச் சிறிது மாற்றி அமைத்துக் கொண்டிருத் தலறிக.
|
( 71 ) |
| 564 |
இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை |
| |
பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம் பொன்னார் |
| |
மென்புன மருளி னோக்கின் மானின மாதி யாகத் |
| |
தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சோ்ந்தாள். |
|
|
(இ - ள்.) இன்சுவை யாழொடு - இனிய சுவை தரும் யாழுடன்; அன்னம் மழலை இளங்கிளி மஞ்ஞை - அன்னமும் இளமை பொருந்திய மழலையுடைய கிளியும் மயிலும்; பொன்
|
|