பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 38 

   (வி - ம்.) கம்பலம் : உரிச்சொல் திரிவு (கம்பலை) . பொய்கை பார்ப்பெழ என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. பட : உவமவுருபு.

 

   முன் களை பறியாதவற்றை ஈண்டுக் களிப்பினால் அரிந்தார்.

 

   உழவர் கையே உலகெலாந் தாங்கும் கை என்பது கருதி வலியுடைக்கைகளான் என்று தேவர் அடைபுணர்த்தனர் என்றல் சிறப்பு என்னை? ”உழவினார் கைம்மடங்கின் 'இல்லை விழைவதூஉம், விட்டே மென்பார்க்கு நிலை” என்பது பொய்யாமொழியன்றோ? (குறள். 1036)

( 27 )
57 வாளையி னினந்தலை யிரிய வண்டலர்
தாளுடைத் தாமரை கிழிய வண்சுமை
கோளுடை யிளையவர் குழாங்கொண் டேகலிற்
பாளைவாய்க் கமுகினம் பழங்கள் சிந்துமே.

   (இ - ள்.) கோளுடை இளையவர் குழாம் - தொழில் ஆற்றலுடைய இளைஞர் திரள் ; வாளையின் இனம் தலை இரிய - வாளையின் குழு தம் இடத்திலிருந்து ஓடவும் ; வண்டு அலர் தாளுடைத் தாமரை கிழிய - வண்டுகள் துகைத்து அலர்ந்த , நாளங்களையுடைய தாமரை மலர்கள் கிழியவும் ; வண்சுமை கொண்டு ஏகலின் - வளவிய நெற்சூட்டைச் சுமந்து செல்வதால்; பாளை வாய் கமுகினம் பழங்கள் சிந்தும் - அச்சுமை பட்டு மடற்கமுகுகள் பழங்களைச் சிந்தும்.

 

   (வி - ம்.) தலை - இடம், வண்டு அலர் - வண்டு துகைத்து அலர்ந்த. பாளைவாய் கமுகு - மடற் கமுகு.

 

   கோள் - ஆற்றல்.

 

   இச் செய்யுளின்கண்,

 
  ”நாடென்ப நாடா வளத்தன நாடல்ல  
  நாட வளந்தரு நாடு” (குறள். 739)  

   என்பதுபற்றி அந்நாட்டின்கண் மக்கள் வருந்தாமற் பெறாநின்ற வளம் கூறப்படுகின்றது. மேல்வரும் 58 - 60-61. 62. 63- ஆம் செய்யுள்களும் இன்ன.

( 28 )
58 சோர்புயன் முகிற்றலை விலங்கித் தூநில
மார்புகொண் டார்ந்தது நரல வண்சுளை
யார்வுறு பலாப்பழ மழிந்த நீள்களம்
போர்வினான் மலிந்துடன் பொலிந்த நீரவே.

   (இ - ள்.) புயல்சோர் முகில் தலைவிலங்கி - நீரைப் பொழியும் முகிலைத் தலைச்சென்று தடுக்குமாறு; தூநிலம் மார்புகொண்டு ஆர்ந்து - தூய நிலத்தின் மார்பையெல்லாம் தமக்கு இடமாகக்