| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
381  | 
  | 
| 
 நாவாலும் பாடிற்றோ?; என்று நைந்தார் - என்று கூறி அரசர் முதலானோர் வருந்தினார். 
 | 
  | 
| 
    (வி - ம்.) இது பதினொரு வகையிலும் உள்ளாளப் பாட்டுப் பாடுங்கால் இடைபிங்கலையை இயக்கம் அறுத்து, மூலாதாரம் முதல் பிரமரந்திரம் அளவும் இயக்கம் ஆக்கி, நடுவு தொழில்வரப் பாடுதல் என்றறிக; 
 | 
  | 
|   | 
”உள்ளாளம் விந்துவுடன் நாதம் ஒலியுருட்டுத் | 
  | 
|   | 
தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மௌ்ளக் | 
  | 
|   | 
கருதி நலிதல்கம் பித்தல் குடிலம் | 
  | 
|   | 
ஒருபதின் மேலென் றுரை.” | 
  | 
|   | 
”கண்ணிமையா கண்டம் துடியா கொடிறசையா | 
  | 
|   | 
பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா - எண்ணிலிவை | 
  | 
|   | 
கள்ளார் நறுந்தெரியற் கைதவனே? கந்தருவர் | 
  | 
|   | 
உள்ளாளப் பாடல் உணர்.” | 
  | 
| 
    இசை மரபு 
 | 
( 166 ) | 
வேறு
 | 
  | 
|  659 | 
இசைத்திறத் தனங்கனே யனைய நீரினார் |  
|   | 
வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழெழீஇ |  
|   | 
விசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலா |  
|   | 
மசிப்பபோன் றிருவிசும் படைந்த வென்பவே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார் - இசையின் நெறியிலே காமனே யனைய தன்மையராகிய; வசைத்திறம் இலாதவர் - வசை வகையறியாதவர்; வான் பொன் யாழ் எழீஇ - உயர்ந்த பொன் யாழை வாசித்து; அவர் விசைத்துப் பாடலின் - அவரும் உச்சத்தே பாடுதலின்; புள் எலாம் வெருவி - (முன் மெய்ம்மறந்து வீழ்ந்த) பறவைகள் எல்லாம் வெருவி; அசிப்ப போன்று இருவிசும்பு அடைந்த - அவரை நகைப்பன போலப் பெரிய வானை அடைந்தன. 
 | 
  | 
| 
    (வி - ம்.) என்ப, ஏ : அசைகள். அசிப்ப : ஹஸிப்ப என்னும் வடசொல் திரிபு. 
 | 
  | 
| 
    அனங்கனேயனைய நீரினார் என்றது அரசர் மக்களை. குலமொத்தலின் அரசரை முற்கூறினார். இன்பம் கெழுமப் பாடுதலறியாது தாம் அவளை வெல்லுதற் பொருட்டு விசைத்துப் பாடினர் என அவர்தம் மாட்டாமையையும் நோக்கத்தினையும் ஒருங்கே உணர்த்துவார் விசைத்தவர் பாட என்றார். அசித்தல் - பரிகசித்தல். 
 | 
( 167 ) | 
|  660 | 
மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக் |  
|   | 
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம் |  
|   | 
போதரப் பாடினாள் புகுந்த போயின |  
|   | 
தாதலர் தாரினார் தாங்கள் பாடவே. | 
 
 
 |