பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 393 

கூத்திற்கு முகமாகிய தோற்றத்தே தோன்றினாள்; மனத்தை எல்லாம் துளக்கினாள் - உள்ளத்தை யெல்லாம் வருத்தினாள்.

 

   (வி - ம்.) மார்ச்சனை முதலியவு முளதாய், 'இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய், நடப்பது தோலியற் கருவியாகும்' என்ற ஓசையும் உடைத்தாய், வெண்கலத்தாற் செய்ததென்பது தோன்றப் பொலிதல்' கூறினார். ”கருங்காலி செங்காலி வேம்பு பலாக் கஞ்சம் - நெருங்கிய சீர்க்குரா மண்ணாம் - பொருந்தவே - ஊன மிலவாய் உயர்நிலத்தில் தோன்றிலாம் - மானின் விழிமடவாய் வைப்பு” துளைபயில் குழல் - துளையிடத்தே வாச்சியமும் யாழ்ப் பாடலும் கண்டப் பாடலும் பயிலப்பட்ட முதல் வங்கியமும் வழிவங்கியமும். ”ஓங்கிய மூங்கில் உயர்சந்து வெண்கலமே - பாங்குறுசெங்காலி கருங்காலி - பூங்குழலாய் - கண்ணன் உவந்த கழைக்கிவைக ளாமென்றார் - பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து” ஏங்க - இவை மூன்றும் கூடி யிசைப்ப. இவை ஆமந்திரிகையாம் : 'குழல்விழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர் - முழவியம்பலாமந்திரிகை.' போந்து - வலக்கால் முன்மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து. கைத்தலங்காட்டுதல் கமல வர்த்தனை, (இது கமல வட்டணையெனவும் வழங்கும்.) மேற்பட வெருவி நோக்கி - தெய்வத்தை நோக்குதலின் மேலேயெழ வெருவிப் பார்த்து. தானை - கரந்து வரல் எழினி. 'வழுவில் கேள்வி நன்னூ லுணர்ந்தோர் - எழினி தானே மூன்றென மொழிப.' 'அவைதாம், ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் - கரந்து வரல் எழினியும் எனமூ வகையே'; இராசதானியிலும் அரங்கிலும் கோலம் மறைத்துவரும் இடத்திலும் இட்ட திரைகள்.

( 183 )
676 தெண்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்க
ளுண்ணட்ட குவளை போலு முருவக்கண் வெருவி யாட
விண்விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவ நெஞ்சம்
பண்விட்ட திருந்து காணும் பன்மணிக் கழலி னார்க்கே.

   (இ - ள்.) தௌ்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்ப - (ஆடும விரைவால்) தெளிந்த தேன் துளியை வண்டுடன் மாலைகள் துளிப்ப; திங்களுள் நட்ட குவளை போலும் உருவக்கண் வெருவி ஆட - திங்களுடன் நட்புக் கொண்ட குவளையைப் போல அழகிய கண்கள் பிறழ்ந்து ஆட; விண் விட்டுக் கடவுள் வீழ - வானிலிருந்து தெய்வங்கள் விழ; புருவம் நுடங்கின - புருவங்கள் அசைந்தன; இருந்து காணும் பன்மணிக் கழலினார்க்கு நெஞ்சம் பண்விட்டது - (அப்போது) அங்கிருந்து பார்க்கின்ற பல மணிக்கழலையுடையார்க்கும் நெஞ்சம் நிலை குலைந்தது.

( 184 )
677 செங்கதிர்ச் சிலம்பு செம்பொற்
  கிண்கிணி சிலம்பக் கோதை
பொங்கப்பொன் னோலை வட்டம்
  பொழிந்துமின் னுகுப்பப் போர்த்த