|
(வி - ம்.) இளமயில்போல் இருந்தாளாகிய வேற்கண்ணாள் எனக் கூட்டி 'யாழ் பண்ணி' எனக் குளகமாக்கி வரும் பாட்டுடன் முடிப்பர் நச்சினார்க்கினியர். மற்றும், விருந்தாக என்பதனை, 'விருந்தாகச் சீவகற்கே சேர்ந்தன' என்று கொண்டு கூட்டுவர். சீவகன்மேற்கொண்ட காதலால் தன் பண்ணும் பாடலும் வேறுபட்டு நின்றாளென்பதைக் குறித்தே 'விருந்தாக யாழ் பண்ணி' என்றார்.
|
|