பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 435 

நுசுப்பின் பாவை ஒருத்தி - நுண்ணிடைப் பாவையாள் ஒருத்தியே; நாம் பலர் என்று எண்ணி - நாமோ பலருளோம் (எனவே நம்மிற் போர் செய்ய வேண்டுமோ) என்று நினைத்து; நீர் துனித்துத் துளங்கல் வேண்டா - நீர் வெறுத்து மனங்கலங்க வேண்டா; தூமணிச் சிவிறி நீர் தூய் - தூய மணித்துருத்தியினாலே நீரைத் தூவி; தனிக் கயத்து உழக்கி வென்றீர் - தனியே குளத்திலே பொருது வென்றீர்கள்; தையலைச் சார்மின் என்றான் - தத்தையை அடைவீர் என்றான்.

 

   (வி - ம்.) துணியலாகாமையிற் பன்மையாற் கூறினான்.

 

   இதன்கண் தத்தையின் எழிலை விதந்தோதி அரசர்தம் காமக்குணத்தைத் தூண்டுதல் உணர்க.

( 253 )
746 வெந்திற லாளன் கூற
  வேகமோ டுரறி மன்னர்
பந்தணி விரலி னாடன்
  படாமுலைப் போகம் வேண்டிக்
கந்தெனத் திரண்ட திண்டோட்
  கந்துகன் சிறுவன் காயு
மைந்தலை யரவின் சீற்றத்
  தாரழல் குளிக்க லுற்றார்.

   (இ - ள்.) வெந்திற லாளன் கூற - கொடியவன் இவ்வாறு கூற; பந்து அணி விரலினாள் தன் படாமுலைப் போகம் வேண்டி - பந்து பயிலும் விரலினாளின் சாயாத முலைகளின் இன்பத்தை விரும்பி; மன்னர் வேகமொடு உரறி - அரசர்கள் சினங்கொண்டு முழங்கி; கந்து எனத் திரண்ட திண்தோள் - தூணெனத் திரண்ட திண்ணிய தோள்களையுடைய; கந்துகன் சிறுவன் - சீவகன் ஆகிய; காயும் - சினந்த; ஐந்தலை அரவின் சீற்றத்து ஆரழல் குளிக்கல் உற்றார் - ஐந்தலைப் பாம்பின் சீற்றமாகிய பெரு நஞ்சிலே முழுகத் தொடங்கினர்.

 

   (வி - ம்.) தானும் நந்தட்டனும் ஒரு தலையும், பதுமுகன் ஒழிந்த தோழர்கள் மூவரும் மூன்று தலையும், நபுலனும் விபுலனும் ஒருதலையுமாகப் படைவகுத்தெழுதலின், 'ஐந்தலையரவு' என்றார். அது, 'சதுமுகமாகச் சேனை நமர்தலைப் பெய்க' (சீவக. 766) என்பதனானுணர்க.

( 254 )
747 பண்ணியல் யானை மேலான்
  பதுமுகன் பரவைத் தானே
கண்ணிய துணர்ந்து கல்லாக்
  கட்டியங் கார னெஞ்சி