| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
454 |
|
|
தாமரைப் பூவைச் சொரிவதாகிய; ஓர் மாரி ஒத்த - ஒரு முகிலை ஒத்தன.
|
|
|
(வி - ம்.) மற்று : அசை.
|
|
|
பிறை எயிற்றம்பு - அலகம்பு. குழைமுகம் - குண்டலத்தையுடைய முகம்.
|
( 288 ) |
| 780 |
மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக் |
| |
குறைத்தனர் குஞ்சரம் கூந்தன் மாத்துணித் |
| |
திறக்கின ரோடுதோ் மைந்த ரின்னுயிர் |
| |
துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார். |
|
|
(இ - ள்.) மறப்படை பசித்தன இன்று வயிறு ஆர்க என - போர்ப்படைகள் முன்பு பசித்திருந்தன யாவும் இப்பொழுது வயிறு நிறைக என்று கூறி; குஞ்சரம் குறைத்தனர் - யானைகளை வீழ்த்தினர்; கூந்தல் மாத்துணித்து ஓடுந் தேர் இறக்கினர் - பிடரி மயிரையுடைய குதிரைகளை வெட்டி, ஓடுந்தேரைத் தாழ்த்தினர்; மைந்தர் இன்னுயிர் துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார் - வீரரின் இனிய உயிர்கள் துறக்கத்திற்சென்று புகுதுக என்று அவர்களைத் துண்டமாக வெட்டினர்.
|
|
|
(வி - ம்.) 'மறப்படை பசித்தன வயிறு இன்று ஆர்க' என்றது மறவர் கூற்று. குஞ்சரம் - யானை. கூந்தன் மா - குதிரை. ஓடுதேர் இறக்கினர் என மாறுக.
|
( 289 ) |
வேறு
|
|
| 782 |
ஆற்றுவீர் வம்மி னெம்மோ |
| |
டாண்மைமேம் படீஇய வென்பா |
| |
ரேற்றவர் மார்பத் தல்லா |
| |
லிரும்புமேல் விடாது நிற்பார் |
| |
கூற்றம்போற் கொடிய யானைக் |
| |
கோடுழு தகன்ற மார்பங் |
| |
கீற்றுப்பட் டழகி தாகக் |
| |
கிடக்கெனக் கொடுத்து நிற்பார். |
|
|
(இ - ள்.) எம்மோடு ஆண்மை மேம்படீஇய ஆற்றுவீர் வம்மின் என்பார் - எம்முடன் நும் வீரம் மேம்படுத்தற் பொருட்டுப் பொருதல் வல்லீர் வருவீர் என்பார்; ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார் - எதிர்ந்தவர் மார்பிலன்றி எதிராதார் மார்பிற் படைர்யெறியாமல் நிற்பார்; கூற்றம் போல் கொடிய யானைக் கோடு உழுது - கூற்றுவனைப்
|
|