| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
460  | 
 
  | 
 
| 
    (இ - ள்.) சீவகன் தம்பியை நோக்கி - சீவகன் நந்தட்டனைப் பார்த்து; இம்பர் நம் இடர்கெட இரண்டும் வல்லையாய் - இவ்விடத்தில் நமது துன்பம் கெட வீரமந்திரம் இரண்டையும் நீ கற்று; சாமரை வெம்பரி மான் செவி - சாமரையையும் விரை வினையுமுடைய புரவியின் செவிகளிலே; நீ மொழிக என நயந்து கூறினான் - நீ உரைப்பாயாக என்று விரும்பிக் கூறினான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) இரண்டும் - பறப்பிக்கு மதுவும் வேண்டுமிடத்தே நிறுத்துவிப்பதுவும். மந்திரம ்: குதிரைகளை விரைவிற் செலுத்தும் காண்ட மந்திரம். 
 | 
  | 
 
| 
    மந்திரம் இரண்டையும் அவனுக்கு ஓதி இவற்றைக் கற்று வல்லையாய் நீ மொழிக என்றான் என்க. தம்பி : நந்தட்டன். 
 | 
( 300 ) | 
 
வேறு
 | 
  | 
 
 
|  793 | 
மந்திரங் கேட்டு நான்கும் |  
|   | 
  வானெட்டிப் புகுவ வேபோ |  
|   | 
லந்தரத் திவர்ந்த வாழிக் |  
|   | 
  கானிலம் விட்ட மாலைச் | 
 
 
 | 
 
 
|  791 | 
பொன்னனாள் புணர்முலைப் போகம் வேண்டிய |  
|   | 
மன்னரோ டிளையவர் மறலி வாளம |  
|   | 
ரின்னண மித்தலை மயங்க வத்தலைக் |  
|   | 
கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) பொன் அனாள் புணர்முலைப் போகம் வேண்டிய மன்னரோடு - திருவனைய தத்தையின் முலைகளின் இன்பம் விரும்பிய அரசரோடு; இளையவர் மறலி - தோழர்கள் மாறுபடுதலாலே; வாள் அமர் இத்தலை இன்னணம் மயங்க - வாட்போர் இங்கே இவ்வாறு மயங்குற; அத்தலைக் கொல்நவில் வேலினான் நிலைமை கூறுவாம் - ஆண்டு நின்ற, கொலையிற் பழகிய வேலினானாகிய சீவகன் நிலையை விளம்புவோம். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) பொன் - திருமகள். இளையவர் என்றது சீவகன் தோழரை. மறலி - மறல. கொல்நவில் வேலினான் - கொலைத்தொழிலிற் பயின்ற வேலை ஏந்திய சீவகன். 
 | 
( 299 ) | 
 
 
|  792 | 
தம்பியைச் சீவக னோக்கிச் சாமரை |  
|   | 
வெம்பரி மான்செவி வீர மந்திர |  
|   | 
மிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய் |  
|   | 
நம்பிநீ மொழிகென நயந்து கூறினான். | 
 
 
 |