பக்கம் எண் :

                         
காந்தருவ தத்தையார் இலம்பகம் 462 

தாங்கி - தாற்றுக்கோலை வலக்கையில் எடுத்து; வென்றி முடிக என - நமக்கு வெற்றி வருக என்று; புரவி முள்ளால் உறுத்தினான் - புரவியை அம் முள்ளாலே உறுத்திச் செலுத்தினான்; கடுகிய வண்ணம் மொழிதல் தேற்றேன் - அவை அப்போது விரைந்த இயல்பை உரைத்தல் அறியேன்; மாவின் தார் ஒலி - புரவிகளின் கிண்கிணி மாலை ஒலி; படையது செவியும் - படையின் காதிலும்; காமர் பொன்றேர் கண்ணும் - அழகிய தேர் (படையின்) கண்களினும்; பற்றி நின்றிட்ட - அமைந்து, விடாமல் நின்றன.

 

   (வி - ம்.) அன்று, ஏ : அசைகள். முட்கோல் - தாற்றுக்கோல். கடுகிய வண்ணம் மொழிதல் தேற்றேன் என்றது தேவர் வியந்தது

( 302 )
795 அண்ணறோ் பறவை என்பா
  ரருவமே யுருவம் என்பார்
மண்ணதே வான தென்பார்
  மனத்ததே முகத்த தென்பார்
கண்ணதே செவிய தென்பார்
  கலங்கநூல் கழிய நோக்கிப்
பண்ணிய வீதி பற்றி
  மண்டலம் பயிற்றி னானே.

   (இ - ள்.) அண்ணல் தேர் - சீவகன் தேரை; பறவை என்பார் - பறவை என்றுரைப்பார்; உருவம் அருவமே என்பார் - இஃது உருவம் உடையது என்பார்; (எங்கும் கலத்தலின்) அருவமோ என்றும் உரைப்பர்; மண்ணதே வானது என்பார் - தேர் மண்ணிலுள்ளது என்பர்; வானில் உள்ளது என்பர்; முகத்திலுள்ளது என்பர்; கண்ணதே செவியது என்பார் - கண்களில் உள்ளது என்பர்; செவிகளில் உள்ளது என்பர்; கலங்க - இவ்வாறு பலரும் பலவகையாகக் கூறிக் கலங்கா நிற்க; நூல் கழிய நோக்கி - புரவியியல் கூறும் நூலை முற்றும் ஆய்ந்து; பண்ணிய வீதி பற்றி - அதிற் பண்ணின வீதியைத் தொடங்கி;' மண்டலம் பயின்றினான் - மண்டலம் என்னும் கதியைப் பயிற்றினான்.

 

   (வி - ம்.) வியத்தற்குரிய இதனைக் கம்பர் தமது காப்பியத்துள்,

 
  ”முன்னேயுளன் பின்னேயுளன் முகத்தேயுளன் அகத்தின்  
  தன்னேயுளன் மருங்கேயுளன் தலைமேலுளன் மலைமேல்  
  கொன்னேயுளன் நிலத்தேயுளன் விசும்பேயுளன் கொடியோர்  
  என்னேயொரு கடுப்பென்றிட இருஞ்சாரிகை திரிந்தான்”  

   என அமைத்துக் கொண்டார்.

( 303 )