| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
481  | 
 
  | 
 
| 
    (வி - ம்.) பசுங்காயும் பழுக்காயும் பாக்குவகை. ஏந்திய - உயர்ந்த. 'வேண்டிய' என்பதூஉம் பாடம். படலிகை - பெட்டி. 
 | 
  | 
 
| 
    கவர்பழுக்காய் : வினைத்தொகை; கண்டோர் நெஞ்சைக் கவரும் பழுக்காய் என்க. பழுக்காய் என்றது பாக்கினை. கா-காவுதடி. இதனை இக் காலத்தார் காவடி என்பர். மெல்லிலை, வெற்றிலை : வினைத்தொகை. உவரி - வெள்ளம். 
 | 
( 334 ) | 
 
 
|  827 | 
சண்பகந் தமநகந் தமால மல்லிகை |  
|   | 
தண்கழு நீரொடு குவளை தாமரை |  
|   | 
வண்டின மிசைகொள வாசப் பூச்சுமை |  
|   | 
கொண்டவர் குழாம்பொலி வுற்ற தாங்கொர்பால். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை தண் கழுநீரொடு குவளை தாமரை - சண்பகமும் தமநகக் கொழுந்தும் பச்சிலையும் மல்லிகையும் தண்ணிய கழுநீரும் குவளையும் தாமரையும் ஆகிய; வாசப் பூச்சுமை வண்டினம் மிசைகொள - மணமுறும் மலர்ச் சுமையை வண்டுகள் மொய்க்க; கொண்டவர் குழாம் ஆங்கு ஒர்பால் பொலிவு உற்றது - கொண்டுவந்தவர் திரள் மற்றொரு பக்கத்திலே அழகுற்றது. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) தமநகம் - மருக்கொழுந்து. தமாலம் - பச்சிலை என்னுமொரு நறுமணமுடைய கொழுந்து. 
 | 
( 335 ) | 
 
 
|  828 | 
ஆர்கெழு குறடுசூட் டாழி போன்றவன் |  
|   | 
சீர்கெழு வளமனை திளைத்து மாசனங் |  
|   | 
கார்கெழு கடலெனக் கலந்த வல்லதூஉம் |  
|   | 
பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்ற அவன் சீர்கெழு வளமனை - ஆர் பொருந்திய குறடும் சூட்டுமுடைய சக்கரம் போன்ற கந்துகனுடைய சிறப்புப் பொருந்திய வளமனையிலே; மாசனம் திளைத்துக் கார் கெழு கடல் எனக் கலந்த - மக்களின் திரள் நெருங்கி (ஒலியினாற்) கருமை பொருந்திய கடல்போலக் கலந்தன; அல்லதூஉம் பார்கெழு பழுமரப் பறவை ஒத்தவே - அஃதன்றி அம் மக்கள் தொகுதி (பயன்கொள்ளும் முறையால்) நிலமிசை பொருந்திய பழுத்த மரத்திற் பறவைகளையும் போன்றன. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) அச்சுக் கோக்குங் குறடு மாளிகைக்கு, நடுவு போக்கும் ஆர் தெருவுகளுக்கும், விளிம்பிற் சூட்டு மதிலுக்கும் உவமை. மற்றும், மனையைச் சூழ வரிசைப் பொருள்கள் நிறைத்தலின் கடல் போன்றென்றுமாம். 
 | 
  |