பக்கம் எண் :

                           
காந்தருவ தத்தையார் இலம்பகம் 490 

பொருந்திய சீவகன் அதைக் கைக்கொண்டு; மரபினால் நோக்குகின்றான் - முறையாக வாசிக்கின்றான்.

 

   (வி - ம்.) 'மரபினால்' என்பதற்கு 'வழிபாட்டுடன்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்னியர்.

 

   இன்னணம் - இவ்வாறு. காவு காண்டலாவது. பூம்பொழிலிற் னெ்று ஆடுதல.் மார்பன் : சீவகன். ஒருவன் என்றது தரன் என்னும் விஞ்சையனை. தொழுதனன் : முற்றெச்சம். மரபு - வாசிக்குமுறைமை. நோக்குதல் - ஈண்டு ஓதுதல் என்பதுபட நின்றது.

( 350 )

வேறு

 
843 உருமுக்கதிர் வேற்கலுழ னோலையுல கென்னும்
பருமைக்குருப் பளிங்கிற்புகழ்ப் பஞ்சிமுழு தடுத்த
திருமிக்குடைச் செல்வன்றிறற் சாமிநனி காண்க
அருமையற னின்பம்பொரு ளாகென விடுத்தேன்.

   (இ - ள்.) உருமுக் கதிர்வேல் கலுழன் ஓலை - இடி போன்ற, கதிர் வேலையுடைய கலுழன் விடுத்த ஓலை; உலகு என்னும் பருமைக்குருப் பளிங்கின் - உலகம் என்னும் பெரிய நிறமிகுந்த பளிங்கில்; புகழ்ப் பஞ்சி முழுது அடுத்த - புகழாகிய பஞ்சி சிறிதிடமும ஒழியாமல் பரவிய; திருமிக்குடைச் செல்வன் திறல் சாமி நனி காண்க - இச் செல்வத்தினை முற்பிறப்பின் தவ மிகுதியாலே கொண்ட செல்வனான வலிமையுற்ற சீவகசாமி நன்றாக அறிக; அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன் - தனக்கு இன்னும் மேம்பட்ட அறமும் இன்பமும் பொருளும் வளர்க என வாழ்த்தி இது வரவிடுத்தேன்.

 

   (வி - ம்.) தேவனாதலின் கூறினான். விடுத்தேன் : விகாரம் ('விட்டேன் என இருத்தல் வேண்டும்')

 

   கலுழன் - கலுழவேகன். அறம் பொருள் இன்பம் எனற்பாலன செய்யுளாகலின் முறை பிறழ்ந்து வந்தன. சாமி என்றது சீவகசாமி என்றவாறு; விளி.

( 351 )
844 தத்தையொடு வீணைமனர் தாம்பொருது தோற்ப
மொய்த்தகலை நம்பிமுகிழ் முலையையிசை வெல்ல
வைத்தகதிர் வேலின்வலி யார்க்குரிய ளென்னச்
சித்தங்கரிந் தாங்குக்கொடி யான்செரு விளைத்தான்.

   (இ - ள்.) மனர்தாம் தத்தையொடு வீணை பொருது தோற்ப - மன்னர்கள் தாம் தத்தையுடன் வீணையால் பொருது தோற்றபின்; மொய்த்த கலை நம்பி முகிழ்முலையை இசை வெல்ல - செறிந்த கலைச் செல்வனாகிய சீவகன் தத்தையை இசையாலே