| குணமாலையார் இலம்பகம் |
509 |
|
| 877 |
பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை |
| |
யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் |
| |
செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் |
| |
கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். |
|
|
(இ - ள்.) பைம்பொன் நீள் உலகு அன்றி - பெரிய பசும் பொன்னுலகில் அன்றி; இப் பார்மிசை இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில் - இவ்வுலகிலே இவ்விடத்தே என் சுண்ணத்தை ஒப்பன உள்ளன என்றால்; செம்பொன் பாவை அன்னாய்!- செம்பொன் பாவை போன்ற சுரமஞ்சரியே!; நீ செப்பு என - நீ கூறுக என்று குணமாலை சொல்ல; கொம்பு அன்னாளும் கொதித்து இது கூறினாள் - மலர்க் கொம்பு போன்ற சுரமஞ்சரியும் சினந்து இதனைக் கூறினாள்.
|
|
|
(வி - ம்.) இம்பர் - இவ்விடத்தே. கொம்பனாள் - பூங்கொம்பு போன்றவளாகிய சுரமஞ்சரி.
|
( 27 ) |
| 878 |
சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல |
| |
மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென |
| |
வண்ண வார்குழ லேழையர் தம்முளே |
| |
கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. |
|
|
(இ - ள்.) சுண்ணம் தோற்றனம் தீம்புனல் ஆடலம் - சுண்ணப் பொடியாலே தோற்றோம் எனில் நீராடுவேமல்லேம்; வென்றார்க்கு எண் இல் கோடி பொன் ஈதும் என - அருகனுக்கு மாற்றற்ற கோடி பொன்னைக் கொடுக்கக் கடவேம் என்று சொல்ல; வண்ணம் வார்குழல் ஏழையர் கமழ் சுண்ணத்தின் - அழகிய நீண்ட கூந்தலையுடைய பேதையர் மணந்தரும் சுண்ணத்தினால்; தம்முளே கண் அற்றார் - தங்களுக்குள்ளே அன்பை விட்டனர்.
|
|
|
(வி - ம்.) சுண்ணம் தோற்றலாவது - ஒருவர் சுண்ணம் ஒருவர் சுண்ணத்திற்குத் தாழ்ந்ததாய் அதனையுடையார் தோல்வியுறுதல். ஆடலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. வென்றான் - ஈண்டு அருகக்கடவுள். கண்ணுறுதல் - பகைமை கோடல்.
|
( 28 ) |
வேறு
|
|
| 879 |
மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் |
| |
கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் |
| |
சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் |
| |
வெல்வது சூதென வேண்டி விடுத்தார். |
|