பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 524

906 இன்னதோர் காலத் தின்னா
  னொருமக ளின்ன தொன்றிற்
கின்னதோ ரிடத்தி னெல்லை
  யாட்கடிந் தொழுகி னாள்போ
லின்னதோர் நகரி லென்றாங்
  கென்பெயர் நிற்க வேண்டு
மின்னதோ ராரந் தம்மோ
  வென்றுகொண் டேகி னானே.

(இ - ள்.) இன்னது ஓர் காலத்து - இத்தன்மைத்தான ஒரு காலத்தே; இன்னான் ஒரு மகள் - இன்ன வணிகனுடைய ஒப்பற்ற மகள்; இன்னது ஒன்றிற்கு - இன்னதொரு செயலுக்கு; இன்னது ஓர் இடத்தின் எல்லை - இத் தெருவிடத்தின் எல்லையிலே; ஆள்கடிந்து ஒழுகினாள் - ஆடவரை வெறுத்து வாழ்ந்தாள்; இன்னது ஒர் நகரின் என்று - இத் தன்மைத்தான நகரிலே என்று; என் பெயர் நிற்க வேண்டும் - என்புகழ் நிலைபெற வேண்டும்; இன்னது ஓர் ஆரம் தம்மோ - விலையில்லாத இந்த ஆரத்தைத் தருவாயாக; என்று கொண்டு ஏகினான் - என்றுரைத்து, அதனைக் கையிற்கொண்டு சென்றான்.

(வி - ம்.) போல், ஆங்கு: உரையசைகள். ஆங்கு - அரசனிடத்தே என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். தம்மோ - தருவாயக. 'நல்லெயில் உழந்த செல்வர்த் தம்மின்' (மதுரைக். 731) என்றார் பிறரும்.

செயற்கரிய செயலாகலின் இதனால் புகழ் உண்டாதல் ஒருதலை என்பான் ” என் பெயர் நிற்கவேண்டும்” என்றான்.

( 56 )
907 வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச்
செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு
மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப
கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே.

(இ - ள்.) வையகம் மூன்றும் விற்கும் மாமணி ஆரம் ஏந்தி - மூவுலகையும் விலைகொள்ளும் பெரிய மணிமாலை ஒன்றை ஏந்திச் சென்று; செய்கழல் மன்னற்கு உய்த்து - கழல் அணிந்த வேந்தனுக்குக் கையுறையாக நல்கி; தன்குறை செப்பலோடும் - தன் வேண்டுகோளை விளம்பினவுடன்; ஐ என மன்னன் ஏவ - அழகியதே என்று வேந்தன் அவ்வாறு செய்யப் பணிக்க; ஆள் வழக்கு அற்றது - தெருவிலே ஆடவர் வழங்குதல் நீங்கியது; கைபுனை பாவை எல்லாம் - அப்போது அம் மாடத்திலே