பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 526

தானே துன்பக் காரணமாய் இன்பத்தைத் துறப்பிக்கும் என்ற பழமொழியுமாம். அது, 'விளையாட்டே சலாமம்' என்னும் பழமொழி” என்றுங் கூறுவர்.

இன்பக் காரணமே துன்பத்திற்கும் காரணமாதலை இக் காவியத்தினும் சிலப்பதிகாரத்தினும் இராமாயணத்தினும் காணலாம். ஏன்? காவியங்களனைத்தினும் காணலாம் போலும். அவளது குணநலந் தோன்ற 'ஈர்மலர்மாலை' என்றார். இச்செய்யுளான் குணமாலை என்னும் அவள் பெயர்க்கேற்ப அவள் குணநலந் தோன்றுதலுணர்க.

( 59 )
910 தண்ணந் தீம்புன லாடிய தண்மலர்
வண்ண வார்தளிப் பிண்டியி னானடிக்
கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை
வண்ண மாமல ரேற்றி வணங்கினாள்.

(இ - ள்.) தண்அம் தீ புனல் ஆடிய - குளிர்ந்த இனிய நீர் விளையாட்டை வேண்டி; தண்மலர் வண்ணம் வார் தளிர்ப்பிண்டியினான் அடிக்கு - குளிர்ந்த மலருடன் அழகிய நீண்ட தளிரையுடைய அசோகின் நிழலில் அமர்ந்த அருகனடிக்கென; எண்ணி - நினைந்து; ஆயிரம் ஏந்து பொன்தாமரை வண்ணமாமலர் - ஆயிரம் பொற்றாமரை மலர்களையும் பிற அழகிய மலர்களையும்; ஏற்றி வணங்கினாள் - இட்டுத் தொழுதாள்.

(வி - ம்.) எண்ணி - இந் நட்பினைப் பிரித்த தீவினை நீங்கும் வழி இதுவென நினைந்து. புனலாடப் போகிறவள் இப் பிரிவுக்குக் கழுவாய் கண்டாள்.

( 60 )
911 ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென
மாசை மாக்கடன் மன்னவ னாடலின்
மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ
ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே.

(இ - ள்.) ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என - விரும்பிய மக்களுடன் அந்தணரும் கொள்க என்று; மாசை மாக்கடல் மன்னவன் ஆடலின் - பெரிய பொற்கடலை அரசன் கையாண்டதால்; மீசை நீள் விசும்பின் தலைச்சென்றது ஓர் ஓசையால் - மேலே உள்ள பெரிய வானிலே சென்றதான ஓர் ஒலியுடன்; சனம் ஒள்நிதி உண்டது - மக்கள் திரள் சிறந்த நிதியை வாரிச் சென்றது.

(வி - ம்.) 'ஆடுதல்' என்பதற்குப் 'பிறத்தல்' என்று பொருள் கொண்டும் 'கடல்' என்னாது, 'கடன்' என்றும் கொண்டு 'பெரியதொரு கடனாகப் பொன்னிலே பிறத்தலின்' என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். பொன்னிலே பிறத்தலாவது பொன்னாலே பசு ஒன்றைச் செய்து அதன் வாயாற் புகுந்து பின்புறத்தே வெளிவருதல். பிறகு