பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 527

அப் பொற்பசுவைத் தானஞ்செய்திடுவர். இஃது அரசர்க்குரிய தானங்களில் ஒன்றென்பர்.

'உண்டற்குரிய அல்லாப் பொருளை - உண்டன போலக் கூறலும் மரபே' (தொல். பொருளியல்-19) என்றதனால் 'உண்டது' என்றார்; 'குணனுணப் பட்டோர்' (கலி. 23) என்றாற்போல. மீசை - மிசை; முதனீண்டது. மீமிசை என்பதன் கண் மி : கெட்டது எனினுமாம்.

( 61 )
912 மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய
சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயி
னிகரி னேமிதன் னீணகர்க் காகெனா
நகரம் நாலிரு கோடி நயந்ததே.

(இ - ள்.) மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய - மீனக் கொடியை உடைய காமனை வென்ற; சிகரச் செவ்வரைத் தீ நிறப் பொன் எயில் - உச்சியையுடைய செம்மலை போலும் வடிவத்தையும் நெருப்பின் வண்ணத்தையும் உடைய பொன்மதிலையுடைய; நிகரில் நேமிதன் நீள்நகர்க்கு - ஒப்பற்ற நேமிநாதரின் பெரிய கோயிலுக்கு; ஆகஎனா - ஆகுக என்று; நால் இருகோடி நகரம் நயந்தது - எட்டுக்கோடி பொன்னை நகரம் நீராடுதானமாக நல்கியது.

(வி - ம்.) காமனை வாட்டிய நேமிநாதர்; காமனை வாட்டிய பொன் எயிலுமாம். 'அளித்தது' என்றும் பாடம்.

மகரவெல் கொடிமைந்தன் என்றது காமனை. நேமி - நேமிசுவாமி என்னும் 22 ஆம் தீர்த்தங்கரர். நகரம், கோடி என்பன ஆகுபெயர்கள்.

( 62 )

வேறு

913 உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர்
கவான்முதற் கூப்பிய கனக மாழையாற்
றவாவினை யடைகரை தயங்கு சிந்தை நீ
ரவாவெனு முடை கட லடைக்கப் பட்டதே.

(இ - ள்.) இரவலர்க்கு உவாமுதல் உடைமை உய்த்தவர் - இரவலர்க்குப் பொன்னையே யன்றி யானை முதலான உடைமைகளை (முற்படக்) கொடுத்து அவர்கள்; கவான் முதல் கூப்பிய கனக மாழையால் - (பின்னும்) அவ்விரவலரின் காலடியிலே குவித்த பொற்கட்டியால்; தவாவினை தயங்கு சிந்தைநீர் - இரவலரின் கெடாத தீவினையாலுண்டாகிய உள்ள வருத்தம் என்னும் நீரினால்; அடைகரை உடை அவாஎனும் கடல் - அடைகரை உடைந்த ஆசையென்னும் கடல்; அடைக்கப்பட்டது - அடைபட்டது.