பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 55 

   (இ - ள்.) விெரீஇ உற்றவர் நங்கைமார் கோழிமேல் எறிந்த ஒண்குழை - நெல்லுப் பார்த்திருக்கும் பெண்கள் கோழிமேல் எறிந்த ஒளிமிகுங் காதணி; பொன் சிறு தேர்மிசைப் பொலிந்த போதகம் நல்சிறார் ஊர்தலின் - பொன்னாலான சிறு தேரில் விளங்கும் யானையின்மேல் அழகிய சிறுவர்கள் ஊர்ந்து செல்கையில்; அத்தேர் உருள்கொடா வளமை சான்ற - அத்தேரை உருளாவண்ணம் புரியும் வளங்கள் நிறைந்தன.

 

   (வி - ம்.) 'விரீகி' என்பது 'விெரீஇ' என ஆயிற்று. மற்று : அசை. விெரீஇ - நெல். 'குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர்' (தொல். சொல். 452. இளம் - உரை மேற்கோள்.)

 

இச் செய்யுளோடு,

 
  ”நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்  
  கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை  
  பொற்கால் புதல்வர் புரவியின் றுருட்டும்  
  முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்”.  

எனவரும் பட்டினப்பாலையை (22-6) நினைக.

 

   இஃது அந்நகரக் குடிமக்களின் செல்வ மிகுதியைக் குறிப்பான் உணர்த்தியவாறாம்.

( 60 )
90 மாலையும் பசும்பொனு மயங்கி வார்கணைக்
கோலெயுங் குனிசிலை நுதலி னாரொடு
வேலிய லாடவர் விரவி விண்ணவ
ராலய மிதுவென வையஞ் செய்யுமே.

   (இ - ள்.) மாலையும் பசும்பொனும் மயங்கி - மாலையும் புதிய பொற்பூணும் கலக்கப்பட்டு; வார் கணைக்கோல் எய்யும் குனிசிலை நுதலினாரொடு - நீண்ட அலகினையுடைய அம்பை எறியும் வளைந்த வில்லைப்போன்ற புருவ மங்கையருடன்; வேல் இயல் ஆடவர் விரவி - வேல் பயிலும் ஆடவர்கள் கலக்கப்பட்டு; இது விண்ணவர் ஆலயம் என ஐயம் செய்யும் - இது வானவரின் இருப்பிடம்போலும் என்ற ஐயத்தை அந்நகர் உண்டாக்கும்.

 

   (வி - ம்.) கணை - அலகு.

 

   பசும்பொன் : கருவியாகு பெயராகப் பூண்களை உணர்த்தியது.

( 61 )
91 கற்சுணஞ் செய்ததோண் மைந்தர் காதலா
னற்சுணப் பட்டுடை பற்ற நாணினாற்
பொற்சுணத் தால்விளக் கவிப்பப் பொங்கிய
பொற்சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே.