| குணமாலையார் இலம்பகம் | 
579  | 
 
  | 
 
| 
    (வி - ம்.) மேவர் : மேவரு என்பதன் விகாரம். எல்லா வழியானும் பெறுதற்குரியவன் வருந்ததுலின் 'இறைமகன் புலம்ப' என்றார். 
 | 
( 156 ) | 
 
 
|  1007 | 
ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் |  
|   | 
சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி |  
|   | 
லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை |  
|   | 
கூடிமற் றதன்புறங் குலாய கொள்கைத்தே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) ஆடு பாம்பு எனப் புடை அகன்ற அல்குல்மேல் - (படம் விரித்து) ஆடும் அரவம்போல அகன்ற அல்குலின் மேல்; சூடிய கலைப்புறம் சூழ்ந்த பூந்துகில் -அணிந்த மேகலையின்மேல் சுற்றிய அழகிய ஆடை; வளைத்து ஓடிய எரி - வளைய ஓடின எரியை; உருவ வெண்புகை - நிறமுடைய வெள்ளிய புகை; கூடி அதன்புறம் குலாய கொள்கைத்தே - சேர்ந்து வளைத்து அதன் புறத்திலே நிலைபெற்ற தன்மையது. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) பாம்பு அல்குற்கே உவமையாதலின் அடுத்துவரல் உவமை அன்று; 'அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே' (தொல். 34) என்றார். மற்று : அசை. 'மாண்குலாம் குணத்தினால்' (சீவக. 2233) என்பர் பின்னும். 
 | 
( 157 ) | 
 
 
|  1008 | 
கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன |  
|   | 
மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி |  
|   | 
ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன |  
|   | 
பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) கொன்வளர் குவிமுலைக் கோட்டில் - பெருமை வளரும் குவிந்த முலைக் கோட்டிலே; தாழ்ந்தன மின்வளர் திரள்வடம் - கிடந்தவனவாகிய ஒளிவளரும் முத்துவடங்கள்; பைங்கதிர் இன்வளர் இளம்பிறை - புதிய கதிர்களையுடைய இனிமை வளரும் இளம்பிறை; எழுதப்பட்டன பொன்வளர் செப்பின்மேல் பொலிந்த போன்றவே - எழுதப்பட்டன போன்ற பொன்னால் வளர்ந்த செப்பின்மேல் பொலிந்தன போன்றன. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) கொன் - பெருமை. முலைக்கோட்டிற் கிடந்த முத்து வடம் செப்பின்மேற் பிறை பொலிந்தன போன்றன என்க. வடம் பல வாகலிற் பன்மை பிறைக்கும் கூறினர். 
 | 
( 158 ) | 
 
 
|  1009 | 
குண்டல மொருபுடை குலாவி வில்லிட |  
|   | 
விண்டலர்ந்த தொருபுடை தோடு மின்செய |  
|   | 
மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே |  
|   | 
யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) குண்டலம் ஒருபுடை குலாவி வில்இட - குண்டலம் ஒரு புறத்தே வளைந்து ஒளிசெய ; தோடு ஒருபுடை விண்டு 
 | 
  |