பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 603 

1053 வினையமா மாலை கேள்வன்
  குபேரமித் திரற்குச் சொல்ல
வனையதே பட்ட தென்றா
  லையனே நங்கைக் கொத்தான்
வனையவே பட்ட போலு
  மணிமருண் முலையி னாளைப்
புனையவே பட்ட பொற்றார்ப்
  புண்ணியற் கீது மென்றான்.

   (இ - ள்.) வினயமாமாலை கேள்வன் குபேர மித்திரற்குச் சொல்ல - வினயமாமாலை தன் கணவனாகிய குபேரமித்திரனுக்குக் கூறியவுடன்; அனையதே பட்டது என்றால் - (அவனும்) அதுவே அவள் உள்ளத்திற் கொண்டது என்றால்; ஐயனே நங்கைக்கு ஒத்தான் - அவனே நம் பெண்ணிற்கேற்றவன்; வனையவே பட்டபோலும் மணிமருள் முலையினாளை - எழுதப்பட்டனவே போன்ற மணிமருண்ட முலையாளை; புனையவே பட்ட பொன்தார்ப் புண்ணியற்கு ஈதும் என்றான் - அணிசெயப் பெற்ற பொன்மாலை அணிந்த நல்லோனுக்குக் கொடுப்போம் என்றான்.

 

   (வி - ம்.) அனையதே: ஏ : வினா என்பர் நச்சினார்க்கினியர். அனையதே - அப்படியே. வினயமாலை: என்பது, எதுகை நோக்கி வினயமாமாலை எனப் போலி ஆயிற்று; நற்றாயின் பெயர்.

 

   கேள்வன் - கணவன். குபேரமித்திரன், குணமாலையின்றந்தை. அனையது என்றது, உவமை கருதாமல் சுட்டுக்பொருட்டாய் நின்றது. ஐயன் : சீவகன். நங்கை : குணமாலை: மகளிருட்சிறந்தோள் என்னும் பொருட்டு. புண்ணியம் : சீவகன். ஈதும் : தன்மைப் பன்மை.

( 203 )

வேறு

 
1054 கற்றார் மற்றுங் கட்டுரை
  வல்லார் கவியென்னு
நற்றோ் மேலார் நால்வரை
  விட்டாற் கவர்சென்றார்
சுற்றார் வல்விற் சூடுறு
  செம்பொற் கழனாய்கன்
பொற்றார் மார்பீர் போதுமி
  னென்றாங் கெதிர்கொண்டான்.

   (இ - ள்.) கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும் நால்வரை - படித்தவர் மேலும் புனைந்துரைப்பதிற் சிறந்தவர் கவிஞர் என்னும்முத்திறமுடையார் நால்வரை; நல்தேர் மேலார்