| குணமாலையார் இலம்பகம் |
616 |
|
|
புகையனைய நிறமுடைய ஆடையிற் பொன் அரைநாண் அசைய அரசன் வந்து; மிகைநிறக் களிற்றை நோக்கி - உயர் நிறமுடைய யானையைப் பார்த்து; வேழம் என் உற்றது என்றான் - யானை அடைந்த வருத்தம் என்னென்று பாகனை வினவினான்.
|
|
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர் 'தாழ்ந்து என்பதனைக், 'களிற்றைத் தாழ்ந்து நோக்கி' எனப் பின்னே கூட்டுவர். அவ்வாறு கூட்டுதலிற் போதப் பயனுண் டெனிற் கொள்க. வேந்தன் களிறுற்ற வருத்த நிலையைக் கேட்டு வந்து நோக்கினான் என்று கொள்க.
|
( 227 ) |
| 1078 |
கொற்றவன் குறிப்பு நோக்கிக் |
| |
குஞ்சரப் பாகன் கூறு |
| |
மிற்றென வுரைத்த றேற்றே |
| |
னிறைவநின் னருளி னாங்கொல் |
| |
செற்றமிக் குடைமை யாற்கொல் |
| |
சீவக னின்ன நாளான் |
| |
மற்றிதற் குடற்சி செய்ய |
| |
மதுமிது செறித்த தென்றான். |
|
|
(இ - ள்.) கொற்றவன் குறிப்பு நோக்கி - அரசன் மனக் கருத்தை உணர்ந்து; குஞ்சரப் பாகன் கூறும் - யானைப் பாகன் சொல்வான் ; இறைவ! - அரசே!; நின் அருளின் ஆம்கொல் - நின் உடன்பாட்டினாலோ; செற்றம் மிக்கு உடைமையால் கொல் - இதனிடத்துச் சீவகன் கொண்ட சீற்றமிகுதியாலோ ; சீவகன் இன்ன நாளால் - சீவகன் நீர்விளையாட்டன்று; இதற்கு உடற்சி செய்ய - இதற்குச் சினம் மிக உண்டாக்க ; இது மதம் செறித்தது - இது மதத்தை அடக்கியது ; இற்று என உணர்தல் தேற்றேன் - இதனைத் தவிர யான் வேறு இத்தன்மையது என விளங்கத் தெளிகிலேன் ; என்றான் - என்றுரைத்தான்.
|
|
|
(வி - ம்.) குறிப்பு நோக்கி யென்றார், சீவகனைக் குறை கூறலாகாதெனக் கருதினும், அரசன் சினமுணர்ந்து அரசன் நினைவு மகிழக் கூறுதலின். மற்று ; வினைமாற்று.
|
( 228 ) |
| 1079 |
ஈண்டழற் குட்டம் போல |
| |
வெரியெழத் திருகி நோககிக் |
| |
கோண்டரு குறும்பர் வெம்போர் |
| |
கோக்குழர்ம் வென்ற துள்ளி |
| |
மாண்டதில் செய்கை சூழ்ந்த |
| |
வாணிகன் மகனை வல்லே |
| |
யாண்டிறங் களைவெ னோடிப் |
| |
பற்றுபு தம்மி னென்றான். |
|