பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 616 

புகையனைய நிறமுடைய ஆடையிற் பொன் அரைநாண் அசைய அரசன் வந்து; மிகைநிறக் களிற்றை நோக்கி - உயர் நிறமுடைய யானையைப் பார்த்து; வேழம் என் உற்றது என்றான் - யானை அடைந்த வருத்தம் என்னென்று பாகனை வினவினான்.

 

   (வி - ம்.) நச்சினார்க்கினியர் 'தாழ்ந்து என்பதனைக், 'களிற்றைத் தாழ்ந்து நோக்கி' எனப் பின்னே கூட்டுவர். அவ்வாறு கூட்டுதலிற் போதப் பயனுண் டெனிற் கொள்க. வேந்தன் களிறுற்ற வருத்த நிலையைக் கேட்டு வந்து நோக்கினான் என்று கொள்க.

( 227 )
1078 கொற்றவன் குறிப்பு நோக்கிக்
  குஞ்சரப் பாகன் கூறு
மிற்றென வுரைத்த றேற்றே
  னிறைவநின் னருளி னாங்கொல்
செற்றமிக் குடைமை யாற்கொல்
  சீவக னின்ன நாளான்
மற்றிதற் குடற்சி செய்ய
  மதுமிது செறித்த தென்றான்.

   (இ - ள்.) கொற்றவன் குறிப்பு நோக்கி - அரசன் மனக் கருத்தை உணர்ந்து; குஞ்சரப் பாகன் கூறும் - யானைப் பாகன் சொல்வான் ; இறைவ! - அரசே!; நின் அருளின் ஆம்கொல் - நின் உடன்பாட்டினாலோ; செற்றம் மிக்கு உடைமையால் கொல் - இதனிடத்துச் சீவகன் கொண்ட சீற்றமிகுதியாலோ ; சீவகன் இன்ன நாளால் - சீவகன் நீர்விளையாட்டன்று; இதற்கு உடற்சி செய்ய - இதற்குச் சினம் மிக உண்டாக்க ; இது மதம் செறித்தது - இது மதத்தை அடக்கியது ; இற்று என உணர்தல் தேற்றேன் - இதனைத் தவிர யான் வேறு இத்தன்மையது என விளங்கத் தெளிகிலேன் ; என்றான் - என்றுரைத்தான்.

 

   (வி - ம்.) குறிப்பு நோக்கி யென்றார், சீவகனைக் குறை கூறலாகாதெனக் கருதினும், அரசன் சினமுணர்ந்து அரசன் நினைவு மகிழக் கூறுதலின். மற்று ; வினைமாற்று.

( 228 )
1079 ஈண்டழற் குட்டம் போல
  வெரியெழத் திருகி நோககிக்
கோண்டரு குறும்பர் வெம்போர்
  கோக்குழர்ம் வென்ற துள்ளி
மாண்டதில் செய்கை சூழ்ந்த
  வாணிகன் மகனை வல்லே
யாண்டிறங் களைவெ னோடிப்
  பற்றுபு தம்மி னென்றான்.