| குணமாலையார் இலம்பகம் |
634 |
|
|
மணியாகிய கலை என்க. கல்லை என்பது கலை என நின்றது விகாரம். கற்பின் ஒளிக்கு மணியொளி நிகராகாமையின் கற்பினுக்கு உடைந்த மணிக்கல் என்றார். இனி மாமணிக்கல் என்பதற்கு வயிரமணி என்று கொண்டு திண்மையாலே தங்கற்பினுக்குத் தோற்ற மணி என்றும் கொள்ளலாம். தொவை - ஈண்டுப் பருவப் பெயர்.
|
( 256 ) |
| 1107 |
வட்டிகை மணிப்பலகை வண்ணநுண் டுகிலிகை |
| |
யிட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையிற் |
| |
கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுக |
| |
மட்டவிழ்ந்த கோதையர்கள் வந்துவாயில் பற்றினார். |
|
|
(இ - ள்.) மட்டு அவிழ்ந்த கோதையர்கள் - தேன் சொரியும் மாலை அணிந்த மாதர்கள்; வட்டிகை மணிப்பலகை வண்ணம் நுண் துகிலிகை இட்டு - மணிகள் இழைத்த வட்டிகைப் பலகையிலே வண்ணத்தையும் நுண்ணிய எழுதுகோலையும் போகட்டுவிட்டு; நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின் - வருந்திக் கெடுதலுற்ற மயில்களைப் போல ; கட்டழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக - பெருநெருப்புப் போன்ற மூச்சிலே காய்ந்து கண்ணிகள் தீயவும் பூண்கள் சிதறவும்; இடை நுடங்க வந்து வாயில் பற்றினார் - இடை நொசிய வந்து வாயிலைப் பற்றி நின்றனர்.
|
|
|
(வி - ம்.) வட்டிகை - ஓவியம். தீந்து - தீய : எச்சத்திரிபு. இது கற்புடைமகளிர் நிலை.
|
( 257 ) |
வேறு
|
|
| 1108 |
வினையது விளைவு காண்மி |
| |
னென்றுகை விதிர்த்து நிற்பா |
| |
ரினையனாய்த் தெளியச் சென்றா |
| |
லிடிக்குங்கொ லிவனை யென்பார் |
| |
புனைநல மழகு கல்வி |
| |
பொன்றுமா லின்றொ டென்பார் |
| |
வனைகலத் திகிரி போல |
| |
மறுகுமெம் மனங்க ளென்பார். |
|
|
(இ - ள்.) வினையது விளைவு காண்மின் என்று கை விதிர்த்து நிற்பார் - தீவினையின் பயனைக் காணுமின் என்றுரைத்துக் கை நடுங்கி நிற்பார்; இனையனாய்த் தெளியச் சென்றால் இவனை இடிக்கும்கொல் என்பார் - இவ்வாறு வீரர் கையில் அகப்பட்டுத் தெளிவுடன் (கலக்கமின்றி) சென்றால் இவனைக் காவலன் கொல்வானோ என்பார் ; இன்றொடு புனைநலம் அழகு கல்வி பொன்றும்
|
|