| குணமாலையார் இலம்பகம் |
641 |
|
| 1119 |
நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார் |
| |
நடுக்குறு நவையை நீக்க |
| |
லாண்மக்கள் கடனென் றெண்ணி |
| |
யறிவின்மை துணிந்த குற்றம் |
| |
பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப |
| |
பொறுமதி யென்று பின்னு |
| |
நீண்மைக்க ணின்று வந்த |
| |
நிதியெலாந் தருவ லென்றான். |
|
|
(இ - ள்.) நாண் மெய்க்கொண்டு ஈட்டப்பட்டார் - நாணத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டு சேர்க்கப்பட்ட பெண்கள் ; நடுக்குறும் நவையை நீக்கல் - அஞ்சத்தகும் குற்றத்தை நீக்குதல் ; ஆண் மக்கள் கடன் என்று எண்ணி - ஆண்மக்களின் கடமை யென்று நினைத்து ; அறிவின்மை துணிந்த குற்றம் - அறிவின்மையால் துணிந்து செய்த பிழையை ; பூண் மெய்க்கொண்டு அகன்ற மார்ப! பொறுமதி - அணிகலன் மெய்யிற் கொண்டு விரிந்த மார்பனே! பொறுத்தருள்க; என்று - என்றுரைத்து; பின்னும் - மேலும்; நீண்மைக்கண் நின்று வந்த நிதியெலாம் தருவல் என்றான் - நெடுங்காலமாக இருந்து வரும் செல்வம் யாவும் கொடுப்பேன் என்றும் கூறினான்.
|
|
|
(வி - ம்.) ஆண்மக்கள் என்பார் ஈண்டு அரசராவார்; உயிரைக் காத்தலும் அழித்தலும் அவர் தொழிலாதலின்.
|
( 269 ) |
| 1120 |
வாழிய ரிறைவ தேற்றான் |
| |
மாநிரை பெயர்த்த காளை |
| |
பீழைதான் பொறுக்க வென்னப் |
| |
பிறங்கிண ரலங்கன் மாலை |
| |
சூழ்கதி ராரம் வீழ்நூல் |
| |
பரிந்தற நிமிர்ந்து திண்டோ |
| |
ளூழ்பிணைந் துருமிற் சீறி |
| |
யுடல்சினங் கடவச் சொன்னான். |
|
|
(இ - ள்.) இறைவ! வாழியர் - அரசே!. வாழ்வாயாக!- தோற்றான் மாநிரை பெயர்த்த காளை பீழை பொறுக்க என்ன - அறியாமையால் பெருநிரையை மீட்ட சீவகனின் குற்றத்தைப் பொறுத்தருள்க என்று கந்துகன் வேண்ட; பிறங்கு இணர் அலங்கல் மாலை - விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை; வீழ்நூல் பரிந்து - அமைந்த நூல் அறுந்து; சூழ்கதிர் ஆரம் அற - சூழ்ந்த ஒளியையுடைய முத்துமாலை அற்றுப்போக;
|
|