|
(இ - ள்.) வம்பு அவிழ்கோதை!- மணம் விரியும் மாலையாய்!; தந்த வான்துவர்க் காயை வீழ்த்து - நான் தந்த சிறந்த துவர்க்காய் ஒன்றை நீ வீழ்ப்ப ; ஓர் செம்பழுக்காயை வாங்கித் திருநிலத்து எடுத்துக்கொண்டு - ஒரு செம்மையான பழுக்காயை வளைந்து நீ வழிபாடு செய்த நிலத்திலிருந்து எடுத்து; ஆங்கு, அம்பு அழ நீண்ட வாள்கண் அலமரும் அணிசெய் அம்பூங் கொம்பு அடு நுசுப்பினாய்க்கு - அதனை, அம்பு வருந்த நீண்ட ஒளிமிகுங் கண்களையும், அசையும் அழகிய பூங்கொம்பை வருத்தும் இடையினையுமுடைய நினக்கு ; தந்தனென், பேணிக் கொண்டாய் - கொடுத்தேன் நீ, அதனைக் காப்பாற்றிக் கொண்டாய்.
|
|