|
காலன் ஆவி கவருங்கால் அவனுக்குதவியாக அவ்வுயிர் கொண்ட உடலைச் சிதைக்குமாறு சீவகன் எளிதில் வெல்லும்படி பகைவர் வலியை அழிக்கும் துணைவர் என்பது கருத்து. காலன் ஏவியவிடத்தே சேறற்கு அவனைச் சூழ்ந்த நோய்கள் என்க. அன்றியும் உயிர்களைக் கவர்தற்குக் காலன் கொண்டல், இடி, மின்னல், நீர், காற்று, தீ, மரம், கல், மண் முதலிய பல பொருள்களையும் ஏவுவன் ஆதலால் அவைகள் என்னினும் பொருந்தும். மாலை : குணமாலை.
|
( 294 ) |