பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 666 

வேறு

 
1161 மலைத்தொகை யானை மன்னன்
  மைத்துனன் மதன னென்பான்
கொலைத்தொகை வேலி னானைக்
  கொல்லிய கொண்டு போந்தா
னலத்தகை யவனைக் காணா
  னஞ்சுயிர்த் தஞ்சி நோக்கிச்
சிலைத்தொழிற் றடக்கை மள்ளர்க்
  கிற்றெனச் செப்பு கின்றான்.

   (இ - ள்.) மலைத்தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான் - மலைக் கூட்டம் போன்ற யானைக் கூட்டத்தையுடைய வேந்தனின் மைத்துனனாகிய மதனன் என்பவனாகிய; கொலைத் தொகை வேலினானைக் கொல்லிய கொண்டு போந்தான் - கொலைகளைக் கணக்கிடும் வேலேந்திய சீவகனை அரசன் கொல்வதற்குக் கொண்டு வந்தான்; நலத்தகையவனைக் காணான் - நலமிகும் பண்புடைய சீவகனைக் காணாமல்; நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி - நஞ்சென மூச்சுவிட்டு அச்சத்துடன் பார்த்து ; சிலைத் தொழில் தடக்கை மள்ளர்க்கு - விற்றொழில் புரியும் பெருங்கை வீரர்கட்கு ; இற்றெனச் செப்புகின்றான் - இவ்வாறு பொருத்தமில்லை.

 

   (வி - ம்.) 'மன்னற்கு' என்னும் பாடம் பொருட் பொருத்தமில்லை.

 

   மலைத்தொகை போன்ற யானைத்தொகையையுடைய மன்னன் என்க. தொகை - கூட்டம். மன்னன் - ஈண்டுக் கட்டியங்காரன். மைத்துனனாகிய மதனன் என்பான் என்க. கொலைத்தொகை வேலினான் - கொலைத்தொழின் மிக்க கூட்டமாகிய வேற்படையையுடையவன் என்க. வேலினான் - ஈண்டுச் சீவகன்.

( 311 )
1162 மன்னனாற் சீறப் பட்ட
  மைந்தனைக் கொல்லப் போந்தா
மென்னினிச் சொல்லிச் சேறு
  மென்செய்தும் யாங்க ளெல்லா
மின்னது பட்ட தென்றா
  லெரிவிளக் குறுக்கு நம்மைத்
துன்னுபு சூழ்ந்து தோன்றச்
  சொல்லுமின் செய்வ தென்றான்.

   (இ - ள்.) மன்னனால் சீறப்பட்ட மைந்தனைக் கொல்லப் போந்தாம் - அரசனாற் சினக்கப்பெற்ற சீவகனைக் கொல்லக் கைக்கொண்டு வந்த நாம் ; இன்னது பட்டது என்றால் நம்மை எரிவிளக்குறுக்கும் - யாம்பட்ட துன்பம் இத்தன்மைத்தென்று