| பதுமையார் இலம்பகம் | 
707  | 
  | 
| 
 யாக, ஆங்கே இன்ப கனியை நுகரும் வானவரும் முயன்று வாழ்த்த; காதி கண் அரிந்த காசி இல் தனி முதிர் கடவுள் கோயில் - உபாதிகளைத் தன்னிடத்தே நில்லாதவாறு வேரறுத்த குற்றம் அற்ற அருகன் கோயிலை; வலம் கொண்டு செல்வான் - வலம் கொண்டு செல்கிற சீவகன்; குனிதிரை முளைத்த வெய்யோன் - உயர்ந்து தாழும் அலையுடைய கடலிலே தோன்றிய ஞாயிறு; குன்று சூழ்வதனை ஒத்தான் - மேருவைச் சூழுந்தன்மையை ஒத்தான். 
 | 
| 
    (வி - ம்.) வான் - தேவருலகம். கணன் - கணம்; கூட்டம். காதி - ஞானாவரணீயம் முதலிய எட்டும்,. தனிமுதிர் கடவுள் - ஒப்பற்ற பழைய இறைவன் : அருகன். குன்று ஈண்டு மேரு. 
 | 
( 75 ) | 
|  1241 | 
  தண் கயம் குற்ற போதும் |  
|   | 
  தாழ்சினை இளிந்த வீயும் |  
|   | 
  வண் கொடிக் கொய்த பூவும் |  
|   | 
  வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தித் |  
|   | 
  திண் புகழ் அறிவன் பாதம் |  
|   | 
  திருந்து கைத் தலத்தின் ஏற்றிப் |  
|   | 
  பண்பு கொள் குணம் கொள் |  
|   | 
 கீதம் பாணியில் பாடுகின்றான் | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தண்கயம் குற்ற போதும் - குளிர்ந்த குளத்திலே பறித்த போதினையும்; தாழ்சினை இளிந்த வீயும் - தாழ்ந்த கிளைகளில் இணுங்கின மலரையும்; வண்கொடி கொய்த பூவும் - செழுவிய கொடிகளிற் பறித்த பூவையும்; மட்டு வார்ந்து உயிர்ப்ப ஏந்தி - தேன் பிலிற்றிச் சிந்த எடுத்து; திண்புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி - திணிந்த புகழையுடைய அருகன் திருவடியை அழகிய கைகளால் இட்டு வணங்கி; பண்புகொள் குணம்கொள் கீதம் - இயல்பு கொண்ட குணங்களைத் தன்னிடத்தே கொண்ட இசையை; பாணியின் பாடுகின்றான் - தாளத்தோடே பாடுகின்றான். 
 | 
| 
    (வி - ம்.) குற்றபோது - பறித்த மலர். இளிந்த வீ - இணுங்கின (பறித்த) மலர். மட்டு - தேன். அறிவன் - அருகக் கடவுள். பண்பு - இயல்பு. குணம் - இனிமைத்தன்மை என்க. கீதம் - இசை. பாணி - தாளம். 
 | 
( 76 ) | 
வேறு
 | 
|  1242 | 
   ஆதி வேதம் பயந்தோய்நீ |  
|   | 
யலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ |  
|   | 
    நீதி நெறியை யுணர்ந்தோய்நீ |  
|   | 
நிகரில் காட்சிக் கிறையோய்நீ |  
|   | 
    நாத னென்னப் படுவோய்நீ |  
|   | 
நவைசெய் பிறவிக் கடலகத்துன் |  
|   | 
   பாத கமலந் தொழுவேங்கன் |  
|   | 
பசையாப் பவிழப் பணியாயே. | 
 
 
 |