பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 724 

ஒளவையோ! என்று போக - (பதுமை) அம்மாவோ! என்று செல்ல; கொங்கு அலர் கோதை! நங்கை அடிகளோ என்று - மணம் விரியும் மலர்மாலையாய்! திலோத்தமையார் வந்தாரோ என்று வினவி; கொம்பு ஏர் செங் கயல் கண்ணி தோழி - பூங்கொம்பை ஒக்கும் செவ்வரி பரந்த கயலனைய கண்ணியாளான தோழி திருமகள்; சென்று சேர்ந்தாள் - பதுமையினிடம் போய்ச் சேர்ந்தாள்.

   (வி - ம்.) பாம்பு தீண்டியவுடன் பதுமை, 'அம்மாவோ!' என்று அலறி ஓடினாள். முல்லை மலர்ந்ததைப் பார்க்க வந்த பதுமை தன் நற்றாயையும் வரவேற்றாள் என்று கருதிய தோழி, 'நங்கை அடிகளோ?' என்று வினவியவாறு வந்தாள். 'அங்குறை யரவு' என்பதை 'அம் குறை அரவு' எனப்பிரித்துக், 'குறையரவு' என்பது காலம் நீட்டித்தலாற் பாம்பு குறைந்து, ஒரு கோழி யளவிற்குப் பறந்து செல்லும் என்று கூறி அதனைக் 'குக்குட சர்ப்பம் என்ப'- என்று நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும், 'அது அரிகுரற் கோழி நாமத் தரவவட் கடித்ததாக' (சீவக. 1755) என்றதனாலும் உணர்க என்பர். மேலும் 'தடுத்ததனை வெட்டுதல் பாம்பிற் கியல்பாகலின், முகத்தை நோக்கின பாம்பு, அணுகின கையிலே தீண்டிற்று' என்பர். ஏர் - ஒக்கும்.

( 106 )
1272 அடிகளுக் கிறைஞ்சி யைய
  னடிகளைத் தொழுது நங்கை
யடிகளைப் புல்லி யாரத்
  தழுவிக்கொண் டௌவை மாரைத்
கொடியனா யென்னை நாளு
  நினையெனத் தழுவிக் கொண்டு
மிடை மின்னி னிலத்தைச் சோ்ந்தாள்
  வேந்தமற் றருளு கென்றான்.

   (இ - ள்.) கொடியனாய்! - கொடி போன்றவளே!, அடிகளுக்கு இறைஞ்சி - எந்தையாகிய தனபதி மன்னரைத் தொழுது; ஐயன் அடிகளைத் தொழுது - எம் தமையனாகிய உலோகபாலனுடைய அடிகளை வணங்கி; நங்கை அடிகளை ஆரப் புல்லி - நற்றாயை நன்றாகத் தழுவி; ஒளவைமாரைத் தழுவிக்கொண்டு - மற்றைத் தாயரையும் புல்லிக் கொண்டு; என்னை நாளும் நினை என - என்னை எப்போதும் நினைப்பாயாக என்று கூறி; தழுவிக் கொண்டு மிடை மின்னின் நிலத்தைச் சேர்ந்தாள் - மின்னொடு செறிந்த மின்னைப் போல நிலத்திலே சோர்ந்து விழுந்தாள்; வேந்த! அருளுக என்றான் - இளவரசே! அருள் செய்க என்று வந்த வீரன் கூறினான்.

   (வி - ம்.) பதுமை தன் தோழியை நோக்கித் தனக்காகத் தந்தை முதலியோரை வணங்கவும் தழுவவும் கேட்டுக் கொண்டு சோர்ந்து வீழ்ந்தாள். அடிகளுக்கு : உருபு மயக்கம்.

( 107 )