பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 766 

  கணைக்கா னுணுகிய நுசுப்பின்  
  மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.”  
 

(தொல்.கள.10. மேற்.)

 

   எனவரும் பழம்பாட்டை ஒப்புக் காண்க.

( 188 )
1354 மாநீர் மணிமுகிலின் மின்னுக்
   கொடிநுசுப்பின் மயிலஞ் சாய
லேநீ ரிருபுருவ மேறி
  யிடைமுரிந்து நுடங்கப் புல்லித்
தூநீர் மலர்மார்பன் றொன்னலந்
  தான்பருகித் துளும்புந் தேறற்
றெனீர் மலர்மாலை தேன்றுளித்து
  மட்டுயிர்ப்பச் சூட்டி னானே.

   (இ - ள்.) மாநீர் மணி முகிலின் மின்னுக்கொடி நுசுப்பின் மயில் அம் சாயல் - மிகு நீரையுடைய, மணிபோன்ற முகிலினிடத்து மின் கொடிபோலும் இடையினையுடைய மயில்போன்ற சாயலாளை; ஏ நீர் இரு புருவம் ஏறி - தன்னைக் கூட்டத்திற்கு ஏவும் இயல்புடைய இரு புருவமும் நெற்றியில் ஏறி; இடைமுரிந்து நுடங்க - இடை ஒசிந்து அசைய; தூநீர் மலர் மார்பன் - தூய தன்மையுற்ற மலர்ந்த மார்பனான சீவகன்; புல்லி - (அவளைத்) தழுவி; தொல் நலம் பருகி - பழமையான அழகை நுகர்ந்து; துளும்பும் தேறல் தேன் நீர் மலர் மாலை - ததும்பும் மதுவினைப் பருகும் வண்டின் இயல்பினையுடைய மலர் மாலையை; தேன் துளித்து மட்டு உயிர்ப்பச் சூட்டினான் - இனிமை துளிர்த்து மதுவைச் சிந்த அணிவித்தான்

 

   (வி - ம்.) மணி முகிலின் : இன் : சாரியை; ஏழனுருபு என்பர் நச்சினார்க்கினியர். மேலும் 'மட்டுத் தேறல்' என மாறிக் 'காம பானத்தின் தெளிவைப் பருகி' என்பர். உயிர்த்தல் - சுமை போக்குதல்.

( 189 )

வேறு

 
1355 தேனடைந் திருந்த கண்ணித்
   தென்மட்டுத் துவலை மாலை
யூனடைந் திருந்த வேற்க
  ணொண்டொடி யுருவ வீணை
தானடைந் திருந்த காவிற்
  பாடினா டனிமை தீர்வான்
கூனடைந் திருந்த திங்கட்
  குளிர்முத்த முலையி னாளே.