பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 770 

கங்குல் இருளிடை ஏகலுற்றான் - யாவரும் செல்லும் செலவை நடுவறுத்த இரவில் இருளிலே செல்லத் தொடங்கினான்.

 

   (வி - ம்.) 'நல் உயிர்' ஆன்மா. அது கனவிடைப் போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண் வருமாறு போல இவனும் பல மகளிரையும் நுகர்ந்து பின்பு கூடுவன். இனி, உடம்பு நல்லுயிரை நீங்கிப் போனாற்போல் என்றும் உரைப்பர்.

( 195 )

வேறு

 
1361 நீனி றக்குழ னோ்வளைத் தோளியைத்
தானு றக்கிடை நீத்தலுந் தன்பினே
வேனி றக்கண் விழித்தன ளென்பவே
பானி றத்துகிற் பையர வல்குலாள்.

   (இ - ள்.) நீல் நிறக் குழல் நேர் வளைத் தோளியை - நீல நிறக் கூந்தலையும் அழகிய வளையணிந்த தோளையும் உடையாளை; தான் உறக்கிடை நீத்தலும் - சீவகன் துயிலிடைப் பிரிந்தனனாக; தன் பினே - அவன் பிரிவிற்குப் பின்னே; பால் நிறத் துகில் வை அரவு அல்குலாள் - வெண்ணிறத் துகிலையும் பாம்பின் படமனைய அல்குலையும் உடையாள்; வேல் நிறக் கண் விழித்தனள் - வேலனைய ஒளி பொருந்திய கண்ணை விழித்தனள்.

 

   (வி - ம்.) என்ப ஏ : அசைகள்.

 

   நீலநிறம் - நீல்நிறம் என அகரங்கெட்டு நின்றது. தோளி : பதுமை. உறக்கு - துயில். அல்குலாள் கண் விழித்தனள் என்க.

( 196 )
1362 ஆக்கை யுள்ளுறை யாவி கெடுத்தவண்
யாக்கை நாடி யயர்வது போலவுஞ்
சேக்கை நாடித்தன் சேவலைக் காணிய
பூக்க ணாடுமொர் புள்ளுமொத் தாளரோ.

   (இ - ள்.) ஆக்கை யுள் உறை ஆவி கெடுத்து - உடம்பு தன் உள்ளே இருக்கும் உயிரைக் கெடுத்து; யாக்கை நாடி அயர்வது போலவும் - திரும்பவும் பிணித்தலை நினைத்து வருந்துவது உண்டாயின் அதனைப் போலவும்; தன் சேவலைக் காணிய - தன் சேவலைக் காணவேண்டி; சேக்கை நாடி - கூட்டிலே தேடி (அங்குக் காணாமையின்); பூக்கண் நாடும் - மலர்களிலே தேடுகின்ற; ஒர் புள்ளும் ஒத்தாள் - ஓர் அன்னப் பேட்டினைப் போலவும் ஆயினாள்.

 

   (வி - ம்.) ஆக்கை - உடல். யாக்கை - கட்டுதல். சேக்கை : தங்குமிடம்; உறையுள். சேவல் புள் என்பன பூக்கண் நாடும் என்றதனான் அன்னச் சேவலும் அதன் பெடையும் என்பது பெற்றாம்.

( 197 )