பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 776 

1374 அரக்குண் டாமரை யன்னதன் கண்மலர்
விருத்தி மாதர் விலக்க வெரீஇக்கொலோ
வருத்த முற்றன ளென்றுகொன் மேகலை
குரற்கொ டாது குலுங்கிக் குறைந்ததே.

   (இ - ள்.) அரக்கு உண் தாமரை அன்ன தன் கண்மலர் - அரக்கின் நிறத்தைக் கொண்ட தாமரை மலர் போன்ற தன் கண் மலர்களின்; விருத்தி மாதர் விலக்க வெரீஇக் கொலோ? - அஞ்சனத்தையும் மையையும் பதுமை விலக்குதலாலே நமக்கும் துன்பம் வருமென்று அஞ்சியோ?; வருத்தம் உற்றனள் என்று கொல்? - இவள் வருந்தினாள் என்றோ?; மேகலை குலுங்கி குரல் கொடாது குறைந்தது - மேகலை அசைந்து ஆரவாரியாமல் ஓசை அடங்கியது.

 

   (வி - ம்.) விருத்தி - வாழ்வு. குலுங்கல் - அசைதல். மெய் யசையாமற் சோர்ந்ததை இங்ஙனங் கூறினார்.

( 209 )

வேறு

 
1375 துனிவா யினதுன் னுபுசெய் தறியேன்
றனியே னொருபெண் ணுயிரென் னொடுதா
னினியா னிஙனே யுளனே யுரையீர்
பனியார் மலர்மேற் படுவண் டினமே.

   (இ - ள்.) பனி ஆர் மலர்மேல் படு வண்டினமே! - தண்மை நிறை மலரின்மேல் மெல்லிய வண்டினமே!; துன்னுபு துனிவு ஆயின செய்து அறியேன் - நான் அவனைப் பொருந்தி நின்று அவற்கு வெறுப்பானவற்றைச் செய்தறிபேன், தனியேன், ஒரு பெண் உயிர் - நான் தனித்தறியேன்; என் உயிரே ஒரு பெண்ணுயிர்; என்னொடுதான் இனியான் - என்னிடம் இனிய னாகிய அவன்; இஙனே உளனே? உரையீர் - இவ்விடங்களிலே உளனோ? உரைப்பீர்.

 

   (வி - ம்.) அவன் எனக்கு இனிய னாகையால் உரைத்தீர் என்று முனியான் எனற்கு; 'இனியான்' எனவும், பெண்ணுயிர் நீங்கிற் கண்டிருத்தல் பாவம் எனற்குப், 'பெண்ணுயிர்' எனவும் கூறினார்.

( 210 )
1376 நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே
விரையார் பொழிலே விரிவெண் ணிலவே
யுரையீ ருயிர்கா வலனுள் வழியே.

   (இ - ள்.) வீழ் அருவி நிரை நிமிர் பொன் சொரியும் வரையே! - வீழும் அருவி நிரைகளையுடைய உயர்ந்த பொன்