|
பதுமையார் இலம்பகம் |
777 |
|
|
விளங்கும் செய்குன்றே!; புனலே! - நீர் நிலையே!; வழையே! - சுர
புன்னையே!; தழையே! - தழையே!; விரை ஆர் பொழிலே! - மணம்நிறை மலர்க் காவே!; விரி
வெண்ணிலவே! - மலர்ந்த வெண் திங்களே!; உயிர் காவலன் உள் வழி உரையீர் - என் உயிர்
முதல்வன் இருக்கும் இடத்தை உரைப்பீராக!
|
|
|
(வி - ம்.)
நிரைவீழ் அருவி - வரிசையாக வீழ்கின்ற அருவி. செய்குன்றாகலின் நிரைவீழ் அருவி என்றார்.
நிமிர்பொன் - உயர்ந்த பொன். பொன்சொரிதல் - பொன்னொளி வீசுதல். வழை - சுரபுன்னை. விரை
- மணம். காவலன் : சீவகன்.
|
( 211 ) |
| 1377 |
எரிபொன் னுலகின் னுறைவீ ர்தனைத் |
| |
தெரிவீர் தெரிவில் சிறுமா னிடார்ற் |
| |
பரிவொன் றிலிராற் படர்நோய் மிகுமா |
| |
லரிதா லுயிர்காப் பமரீ ரருளீர். |
|
|
(இ - ள்.)
எரி பொன் உலகின் உறைவீர்! - ஒளிரும் பொன் உலகிலே வாழ்வீர்!; இதனைத் தெரிவீர் - (ஆதலின்)
என் காதலன் போன வழியை அறிந்திருப்பீர்; தெரிவு இல் சிறு மானிடரின் பரிவு ஒன்றிலிர்
- (தெரிந்திருப்பவும்) தெரியாத சிறு மனிதரைப்போல அருளிலிரா யிராநின்றீர்; படர்நோய்
மிகும் - துன்ப நோய் மிகும்; உயிர் காப்பு அரிது - (அதனால்) உயிர்காத்தல் இனி அரிது;
அமரீர்! - வானவரே!; அருளீர் - உயிரைக் காக்க அவனை அருள்வீராக.
|
|
|
(வி - ம்.)
பொன்னுலகின் னுறைவீர் என்றது இதனைத் தெரிவீர் என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது.
தேவர் உலகினிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தவிடத்திருந்தே உணரவல்லார் ஆகலின் இங்ஙனம்
கூறினள். தெரிவில் மானிடர் என்பது நும்போன்ற அறியமாட்டாத இயல்புடைய மானிடர்
என்றவாறு. படர் - துன்பம் அமரீர் : அமரர் என்பது விளியுருபேற்று நின்றது.
|
( 212 ) |
| 1378 |
புணார்வின் னினிய புலவிப் பொழுதுங் |
| |
கணவன் னகலின் னுயிர்கை யகற |
| |
லுணார்வீ ரமரார் மகளீ ரருளிக் |
| |
கொணார்வீர் கொடியே னுயிரைக் கொணார்வீர். |
|
|
(இ - ள்.)
அமரர் மகளீர்! - வானவர் மகளிரே!; புணர்வின் இனிய புலவிப் பொழுதும் - கூட்டத்தினும்
இனிமையையுடைய புலவிக் காலத்தும்; கணவன் அகலின் உயிர் கையகல்தல் உணர்வீர் - கணவன்
தழுவுதல் நீங்கின் உயிர் நீங்குதலை அறிவீராகலின்; கொடியேன் உயிரை அருளிக் கொணர்வீர்!
கொணர்வீர் - கொடியவளாகிய என் உயிரை அருள் செய்து கொண்டு தருவீர்! கொண்டுதருவீர்!
|
|