| பதுமையார் இலம்பகம் |
781 |
|
வேறு
|
|
| 1385 |
கரப்புநீர்க் கங்கை யங்கட் |
| |
கடிமலர்க் கமலப் பள்ளித் |
| |
திருத்தகு திரைக டாக்கச் |
| |
சேப்புழிச் சேவ னீங்கப் |
| |
பரற்றலை முரம்பிற் சின்னீர் |
| |
வறுஞ்சுனைப் பற்று விட்ட |
| |
வரத்தவாய்ப் பவளச் செந்தாட் |
| |
பெடையன்ன மழுவ தொத்தாள். |
|
|
(இ - ள்.) பரல்தலை முரம்பின் சின்னீர் வறுஞ்சுனைப் பற்றுவிட்ட - பரற்கற்கள் பொருந்திய மேட்டு நிலத்திலே சிறிதே நீரையுடைய வறிய சுனையிலே கொண்ட பற்றைவிட்ட; அரத்த வாய்ப் பவளச் செந்தாள் பெடை அன்னம் - சிவந்த வாயையும் பவளமனைய சிவந்த கால்களையும் உடைய பெட்டை அன்னம்; கரப்பு நீர்க் கங்கை அங்கண் - சிவன் சடையிற் கரத்தலையுடைய கங்கையின் அழகிய இடத்திலுள்ள; கடி மலர்க் கமலப் பள்ளி - மணமிகு மலராகிய தாமரை யணையிலே; திருத்தகு திரைகள் தாக்கச் சேப்புழி - அழகு பொருந்திய அலைகள் அலைத்துத் துயிற்றச் சேவலோடு துயிலும்போது; சேவல் நீங்க - சேவல் நீங்குதலால்; அழுவது ஒத்தாள் - முன்னிருந்த வறிய சுனையிலே இருந்து அழுவதைப் போன்றாள்.
|
|
|
(வி - ம்.) கரப்பு நீர்க் கங்கை - பாதாள கங்கையெனினும் ஆம். அவனைக் கூடிய பின்பு தந்தையில்லம் கங்கையாய், அவன் நீங்குதலால் அச் சுனையின் தன்மைய தாயிற்று. அன்னம் சுனையில் தங்குதல் இல் பொருளுவமை.
|
( 220 ) |
| 1386 |
மெழுகினாற் புனைந்த பாவை |
| |
வெய்துறுத் தாங்கு மோவா |
| |
தழுதுநைந் துருகு கின்ற |
| |
வாயிடைத் தோழி துன்னிக் |
| |
கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க் |
| |
கிளைநரம் பனைய சொல்லாள் |
| |
கழிபெருங் கவலை நீங்கக் |
| |
காரண நீர சொன்னாள். |
|
|
(இ - ள்.) மெழுகினால் புனைந்த பாவை வெய்துறுத் தாங்கு - மெழுகாற் செய்த பாவையைத் தீயுறுத்தாற்போல; ஓவாது அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை - ஓய்வின்றி அழுது நைந்து
|
|