| பதுமையார் இலம்பகம் | 
788  | 
  | 
|  1396 | 
 வடிமலர்க் காவி னன்று |  
|   | 
  வண்டளிர்ப் பிண்டி நீழன் |  
|   | 
 முடிபொருள் பறவை கூற |  
|   | 
  முற்றிழை நின்னை நோக்கிக் |  
|   | 
கடியதோர் கௌவை செய்யுங் |  
|   | 
  கட்டெயிற் றரவி னென்றேன் |  
|   | 
கொடியனாய் பிழைப்புக் கூறேன் |  
|   | 
  குழையலென் றெடுத்துக் கொண்டாள். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) முற்றிழை! - முற்றிய இழைகளையுடையாய்!; அன்று வடிமலர்க் காவின் வண்தளிர்ப் பிண்டி நீழல் - அன்றைக்கு ஆராயும் மலர்ப் பொழிலிலே வளவிய தளிரையுடைய பிண்டியின் நீழலிலே; பறவை முடிபொருள் கூற - அப்பறவை முடியும் பொருளைக் கூறுதலின்; நின்னை நோக்கிக் கட்டு எயிற்று அரவின் கடியது ஓர் கௌவை செய்யும் என்றேன் - உன்னைப் பார்த்து இக் கூற்றுக் கட்டிய நஞ்சுடைய அரவினாலே கொடியதாகிய ஒரு துன்பத்தை உண்டாக்குவதைக் காட்டும் என்றேன்; கொடியனாய்! - கொடி போன்றவளே!; பிழைப்புக் கூறேன் - தவறுரையேன்; குழையல் என்று எடுத்துக்கொண்டாள் - வருந்தற்க என்று தழுவியெடுத்துக் கொண்டாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) வடிமலர்க்கா : வினைத்தொகை; தழைத்துத் தாழ்ந்த காவுமாம். பிண்டி - அசோகமரம். 'பறவை முடிபொருள் கூறக் கடியதோர் கௌவை செய்யும் என்றேன்' என்றது மேலைச் செய்யுளில் தாரினான் கைப்படும் என்றதற்கு எடுத்துக்காட்டு. 
 | 
( 231 ) | 
|  1397 | 
 அலங்கலுங் குழலுந் தோழி |  
|   | 
   யங்கையி னடைச்சி யம்பூம் |  
|   | 
 பொலங்கலக் கொடிய னாடன் |  
|   | 
  கண்பொழி கலுழி யொற்றிக் |  
|   | 
கலந்தகி னாறு மல்குற் |  
|   | 
   கவான்மிசைக் கொண்டி ருந்தாள் |  
|   | 
புலர்ந்தது பொழுது நல்லா |  
|   | 
  ணெஞ்சமும் புலர்ந்த தன்றே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தோழி - தோழியானவள்; அம் கையின் - அழகிய தன் கையினால்; அம் பொலம் கலம் பூங்கொடியன்னாள் தன் - அழகிய பொன்னாலாகிய கலம் அணிந்த பூங்கொடி போன்றவளின்; அலங்கலும் குழலும் அடைச்சி - மாலையையும் குழலையும் செருகி; கண்பொழி கலுழி ஒற்றி - கண்ணிலிருந்து வடியும் 
 | 
  |