பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 789 

நீரையுந் துடைத்து; அகில் கலந்து நாறும் அல்குல் கவான் மிசைக்கொண்டிருந்தாள் - அகில் மணம் கலந்து கமழும் அல்குலையுடைய தன் துடையின் மேலே கொண்டிருந்தாள்; பொழுது புலர்ந்தது - அப்பொழுது இரவும் விடிந்தது; நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது - பதுமையின் உள்ளமும் தெளிந்தது.

 

   (வி - ம்.) அலங்கல் - மாலை. குழல் - கூந்தல். பொலங்கலம் - பொன்னாலியற்றிய அணிகலம். கொடியனாள் : பதுமை. கவான் - துடை.

( 232 )
1398 கண்கனிந் தினிய காமச் செவ்வியுட் காளை நீங்கத்
தெண்பனி யனைய கண்ணீர்ச் சேயிழை தாய ரெல்லாந்
தண்பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார்.
பண்கனிந் தினிய பாடற் படுநரம் பிளகி யாங்குக்

   (இ - ள்.) பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி யாங்கு - பண் முற்றுப்பெற்று இனிய பாட்டையுடைய ஒலிக்கின்ற நரம்பு பாடலிலே நெகிழ்ந்தாற்போலே; கண் கனிந்த இனிய காமச் செவ்வியுள் - பதுமையின் மெய்யிடங் குழைந்த இனிய காமச் செவ்வியிலே; காளை நீங்க - சீவகன் நீங்கினான் ஆதலின்; தெண் பனி அனைய கண்ணீர்ச் சேயிழை தாயர் எல்லாம் - தெளிந்த பனித்துளி போன்ற கண்ணீரையுடைய பதுமையின் தாயரெல்லாரும்; தண்பனி முருக்கப்பட்ட தாமரைக் காடு போன்றார் - குளிர்ந்த பனியினால் வெதும்பப்பெற்ற தாமரைக் காடுபோல முகம் கருகினர்.

 

   (வி - ம்.) பண்கனிந்து படுநரம்பு இனிய பாடல் படுநரம்பு எனத் தனித்தனி கூட்டுக. கண்கனிந்து என்புழி, கண் இடம் என்னும் பொருட்டு. காளை : சீவகன். சேயிழை : பதுமை. தாயர் : நற்றாயும் செவிலித்தாயரும் என்க.

( 233 )
1399 சில்லரிச் சிலம்பு சூழ்ந்த
  சீறடித் திருவி னற்றாய்
முல்லையங் குழலி னாய்நின்
  முலைமுதற் கொழுநன் மேனாட்
சொல்லியு மறிவ துண்டோ
  வெனக்குழைந் துருகி நைந்து
மெல்லியல் கங்குல் சொல்லிற்
  றிற்றென மிழற்று கின்றாள்.

   (இ - ள்.) சில் அரிச் சிலம்பு சூழ்ந்த சீறடித்திருவின் நற்றாய் - சில பரல்களையுடைய சிலம்பு அணிந்த சிற்றடியாள்