|
(வி - ம்.) 'போகின்ற இடத்து யாங்கள் அவனைக் கண்டதுண்டாயின் அப் பொழுதே சென்று தலைப்படுவேம்' என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர் அது வறுங்கூற்றாய் முடிதல் காண்க. அற்றேல், 'கண்டதுண்டேல்' எனவும், 'அறியின் ' எனவும் இருமுறை ஒரு பொருளையே தருஞ்சொற்கள் வந்தனவால் எனின், கண்டிருந்தால் அவ்விடஞ் சென்று தலைப்படுகிறோம்; ஆகவே, அறியின் உரைத்திடுக' என்றாராதலின் பயன் கருதியே இருமுறை வந்தன என்க.
|
|