| கேமசரியார் இலம்பகம் |
820 |
|
|
வேறு
|
|
| 1450 |
வார்சிலை வடிப்ப வீங்கி | |
| |
வரையெனத் திரண்ட தோளான் | |
| |
சோர்புய றொலைத்த வண்கைச் | |
| |
சுபத்திரன் மனைவி பெற்ற | |
| |
சீர்நலம் கடந்த கேம | |
| |
சரியெனத் திசைக ளெல்லாம் | |
| |
போ்நலம் பொறித்த பெண்மைப் | |
| |
பெருவிளக் காகி நின்றாள். | |
|
|
(இ - ள்.) வார்சிலை வடிப்ப வீங்கி வரையெனத் திரண்ட தோளான் - நீண்ட வில்லைப் பயிற்றுதலாற் பருத்து மலைபோலத் திரண்ட தோளையுடையான்; சோர் புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் - மழைபெய்யும் முகிலை ஓட்டிய வண்மையுடைய கையினான் ஆன சுபத்திரன் என்னும் பெயரினானுக்கு; மனைவி பெற்ற - அவன் மனைவி நிப்புதியென்பாள் ஈன்ற, சீர் நலம் கடந்த கேமசரியென (ஒரு பெண்) - பிறமகளிரின் சிறந்த அழகை வென்ற கேமசரி என்று; திசைகள் எல்லாம் பேர்நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக்கு ஆகி நின்றாள் - திசைகளில் எல்லாம் பெயரின் நலத்தை எழுதிய பெண்மையையுடைய பெரு விளக்கு என ஆகி இருந்தாள்.
|
|
|
(வி - ம்.) ஆகி யெனவே மங்கைப்பருவமுடையாளென்பது பெற்றாம். கேமசரி என (ஒரு பெண்) என ஒரு மொழி சேர்க்க.
|
( 39 ) |
| 1451 |
மாசிலாள் பிறந்த ஞான்றே | |
| |
மதிவலான் விதியி னெண்ணிக் | |
| |
காசிலாள் கண்ட போழ்தே | |
| |
கதுமென நாணப் பட்டான் | |
| |
றூசுலா மல்கு லாட்குத் | |
| |
துணைவனாம் புணர்மி னென்று | |
| |
பேசினா னன்று கொண்டு | |
| |
பெருவிருந் தோம்பு கின்றான். | |
|
|
(இ - ள்.) மாசு இலாள் பிறந்த ஞான்றே - குற்றமிலாத அவள் பிறந்தபொழுதே; மதிவலான் விதியின் எண்ணி - அறிவில் வல்லவனான கணி நூல் முறையானே ஆராய்ந்து; காசு இலாள் கண்டபோழ்தே கதும் என நாணப்பட்டான் - இவள் கண்ட பொழுதே நாணமுறப்பட்டவன்; தூசு உலாம் அல்குலாட்குத் துணைவன் ஆம் - ஆடையணிந்த அல்குலையுடையாட்குக் கணவ
|
|