| கேமசரியார் இலம்பகம் |
831 |
|
|
|
வித்தகன் - சதுரப்பாடுடையவன். இன்னே - இப்பொழுதே. உரைத்தாள் என்பது வேண்டிப்பரவினள் என்பதுபட நின்றது.
|
( 59 ) |
வேறு
|
|
| 1471 |
நிலந்தினக் கிடந்தன நிதியந் நீணகர்ப் | |
| |
புலம்பறப் பொலிவொடு புக்க காலையே | |
| |
யிலங்குபூங் கொடியன வேழை நோக்கமு | |
| |
முலங்கொடோ ளுறுவலி நோக்கு மொத்தவே. | |
|
|
(இ - ள்.) நிலம் தினக் கிடந்த அன நிதி - மண் தின்னுமாறு கிடந்த செல்வத்தையுடைய; அந்நீள் நகர் - அப் பெரிய மனையிலே; புலம்பு அறப் பொலிவொடு புக்க காலை - அம் மனையிலுள்ளோரின் வருத்தம் நீங்க அழகுறச் சீவகன் புகுந்தபோது; உலம்கொள் தோள் உறுவலி நோக்கும் - கற்றூண் போன்ற தோளையுடைய மிகுவலியுடைய சீவகன் பார்வையும்; இலங்கு பூங்கொடி அன ஏழை நோக்கமும் - விளங்கும் பூங்கொடி போன்ற கேமசரியின் பார்வையும்; ஒத்த - ஒன்றுபடப் பொருந்தின.
|
|
|
(வி - ம்.) நிலத்தினக் கிடந்தன நிதியம் என்றது அழிவின்றி மிக்குக் கிடக்கும் நிதியம் என்பதுபட நின்றது. அஃகா வியல்பிற்றாய செல்வம் தங்கிக் கிடத்தற்குக் காரணங் கூறுவார் நச்சினார்க்கினியர் அறத்தால் தேடின பொருள் என்று நுண்ணிதின் உரைத்தனர்.
|
|
|
நிதியந் நீள்நகர் என்புழி மகரவீறு கெடாமல் நகர வீறாய்த் திரிந்து நின்றது.
|
|
|
பெண்டிரின் மென்மைப் பண்பு குறித்த ஏழை என்னும் சொல்லால் கேமசரியையும் ஆடவரின் வன்மையைக் குறித்த உறுவலி என்னுஞ் சொல்லால் சீவகனையுங் கூறிய நயமுணர்க. அவளைப் பூங்கொடி என்றும் அவனை உலங்கொள்தோள் உடையன் என்றலும் உணர்க. உறுவலி : அன்மொழித்தொகை : சீவகன்.
|
( 60 ) |
வேறு
|
|
| 1472 |
கண்ணுறக் காளையைக் காண்டலுங் கைவளை | |
| |
மண்ணுறத் தோய்ந்தடி வீழ்ந்தன மாமையு | |
| |
முண்ணிறை நாணு முடைந்தன வேட்கையு | |
| |
மொண்ணிறத் தீவிளைத் தாளுருக் குற்றாள். | |
|
|
(இ - ள்.) காளையைக் கண்உறக் காண்டலும் - காளையை அங்ஙனம் அவள் எதிர்ப்படக் கண்டாளாக; கைவளை மண்உறத்தோய்ந்து அடி வீழ்ந்தன - கையில் இருந்த வளைகள் மண்உறப் பொருந்திக் காலடியிலே வீழ்ந்தன; மாமையும் உள்நிறை
|
|