| கேமசரியார் இலம்பகம் |
832 |
|
|
|
நாணும் உடைந்தன - மாமையும் உள்ளிருந்த நிறையும் நாணும் கேட்டன; வேட்கையும் ஒள்நிறத் தீ வினைத்தாள் உருக்கு உற்றாள் - அவாவையும் ஒளிரும் தீயென விளைவித்துக் கொண்டாள்; தானும் அத் தீயாலே உருக்குண்டாள்.
|
|
|
(வி - ம்.) உண்ணிறையும் நாணம் : வினைத்தொகை.
|
( 61 ) |
| 1473 |
வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவ | |
| |
ணோக்கணங் காய்மன நோய்செய நொந்தவன் | |
| |
வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர் | |
| |
தாக்கணங் கோமக ளோனெத் தாழ்ந்தான். | |
|
|
(இ - ள்.) வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு - திருத்தமுற்ற தெய்வத்தன்மை நிறைந்த அழகிய யாழ் வல்ல சீவகனுக்கு; அவள் நோக்கு அணங்காய் மனநோய் செய - அவள் நோக்கம் வருத்தமாய் மனத்தை நோய் செய்தலாலே; அவன் நொந்து - அவன் வருந்தி; வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடுந்தோளி - கச்சினால் இறுக்கப்பட்டு வருத்தம் நிறைந்த முலையினையும் வேய் போன்ற நீண்ட தோளினையும் உடையாள்; ஓர் தாக்கு அணங்கோ மகளோ எனத் தாழ்ந்தான் - தாக்கி வருத்தும் ஒரு தெய்வ மகளோ மானிட மகளோ என ஐயுற்றுக் குறைந்தான்.
|
|
|
(வி - ம்.) வாக்கு - திருத்தம். வாக்கணங்கு என்று கொண்டு நாமகள் எனினுமாம். இனி, அணங்கு என்றற்கு வீணைக்குரிய மாதங்கி என்னும் தெய்வம் எனினுமாம். இது நச்சினார்க்கினியர் கொள்கை. சீவக 550 ஆம் செய்யுளையும் உரையையும் காண்க.
|
|
|
தாக்கு அணங்கு : திருமகள் என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 62 ) |
| 1474 |
நல்வளத் தாமரை நாணிய வாண்முகக் | |
| |
கொல்வளர் வேற்கணி னாள்குழைந் தாளெனச் | |
| |
சொல்வளர்த் தாரவ டோழியர் சோர்குழன் | |
| |
மல்வளர் மார்பனை வந்து வளைந்தார். | |
|
|
(இ - ள்.) நல்வளம் தாமரை நாணிய வாண்முகம் - நல்ல வளமிகும் தாமரை மலர் வெள்கிய ஒளியுறும் முகத்திலே; கொல்வளர் வேற்கணினாள் குழைந்தாள் என - கொல்லுந் தொழிலிற்கிடந்த வேலைப்போன்ற கண்ணாள் வருந்தினாள் என்று; சோர்குழல் அவள் தோழியர் சொல் வளர்த்தார் - சோர்ந்த குழலையுடைய கேமசரியின் தோழிகள் சொல்லைப் பரப்பியவராய்; மல்வளர் மார்பனை வந்து வளைந்தார் - மல்லிலே மேம்பட்ட மார்பின்னாம் சீவகனை வந்து சூழ்ந்தனர்.
|
|
|
(வி - ம்.) சோர்குழல் அவள் எனக் கூட்டுக.
|
( 63 ) |