| கேமசரியார் இலம்பகம் |
866 |
|
|
|
முன்னும் தவப்பயனாகவே இவனை எய்தினை; அத் தவப்பயன் கெடா வியல்பிற்றாகலின் மீண்டும் நீ அவனை எய்துல் ஒருதலை என்பது கருத்து.
|
( 123 ) |
| 1535 |
பிறங்கின கெடுங்கள் யாவும் | |
| |
புணர்ந்தவர் பிரிவர் பேசி | |
| |
னிறங்கின வீழு மேலா | |
| |
யோங்கிய வெண்ணில் யோனிப் | |
| |
பிறந்தவர் சாவர் செத்தார் | |
| |
பிறப்பவே யென்ன நோக்கிக் | |
| |
கறங்கிசை வண்டு பாடுங் | |
| |
கோதைநீ கவல லென்றாள். | |
|
|
(இ - ள்.) கறங்கு இசை வண்டுபாடும் கோதை - ஒலிக்கும் இசையுடன் வண்டுகள் முரலும் மலர் மாலையாய்!; பிறங்கினகள் யாவும் கெடும் - மிக்க வனப்புக்கள் யாவும் ஒருகாற் கெடும்; புணர்ந்தவர் பிரிவர் - கூடியவர் பிரிவர்; பேசின் - ஆராய்ந்தால்; மேலாய் ஓங்கிய இறங்கிய வீழும் - மேலாக வளர்ந்தன தாழ்ந்து வீழும்; எண்ணில் யோனிப் பிறந்தவர் சாவர் - கணக்கற்ற பிறவிகளிற் பிறந்தவர் இறப்பர்; செத்தார் பிறப்பவே என்ன நோக்கி - இறந்தவர் பிறப்பர் என்று இன்பமுந் துன்பமும் மாறிமாறி வருமென ஆராய்ந்து; நீ கவலல் என்றாள் - நீ கவலைப்படுவதை விடுக என்றுரைத்தாள்.
|
|
(வி - ம்.) 'புணர்ந்தவர் பிரிவர்' என்பதைப் 'பிரிந்தவர் புணர்வர்' என மாற்றி இறுதியில் தந்து, 'அங்ஙனங் கெட்டாலும், பிரிந்தவர்கள் எல்லோரும் புணர்வரே யென்று பார்த்து நீ கவலாதே' என்று முடிப்பர் நச்சினார்க்கினியர்.
|
|
மேலும் நீ இவ்வுலகியற்கையினை உணர்ந்து ஆற்றியிருத்தலும் வேண்டும் என்றிதனால் ஆற்றுவிக்கின்றனள் என்க.
|
|
பிறங்கினகள் யாவும் என இயைக்க. கள் : விகுதிமேல் விகுதி.
|
( 124 ) |
| 1536 |
எரிதலைக் கொண்ட காமத் | |
| |
தின்பநீர்ப் புள்ளி யற்றாற் | |
| |
பிரிவின்கட் பிறந்த துன்பம் | |
| |
பெருங்கட லனைய தொன்றா | |
| |
லுருகிநைந் துடம்பு நீங்கி | |
| |
னிம்மயோ டும்மை யின்றி | |
| |
யிருதலைப் பயனு மெய்தா | |
| |
ரென்றுயாங் கேட்டு மன்றே. | |
|