| கேமசரியார் இலம்பகம் | 
879  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) மதிமுனி முகத்தியர் என மாறுக. ஆம்பல் : ஒரு நீர்ப்பூ; இது நிலவில் மலருமியல்புடையதாகலின் மதியின் கதிர் பருகும் ஆம்பல் என்றார். 
 | 
| 
    முறுவல் என்றது மகளிர் இன்பத்திற்கு ஆகுபெயர். துனி - துன்பம். கதி - நகரகதி முதலியன. வெவ்வேறு யாக்கைகொண்டுழலுதலால் நாடகம் என்றார். 
 | 
| 
    மதியின் கதிரை விரும்பும் ஆம்பல்போல் முகத்தியர் முறுவலை விரும்பினோர் எனக் கோடலே நூலாசிரியர் கருத்தோடியையும் எனல் அடுத்த செய்யுளாலும் உணரலாம். 
 | 
( 143 ) | 
|  1555 | 
நிழனிமிர் நெடுமதி நிகரி றீங்கதிர்ப் |   |  
|   | 
பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோற் |   |  
|   | 
குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார் |   |  
|   | 
தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நிழல் நிமிர் நெடுமதி நிகர் இல் தீம்கதிர் - ஒளிமிக்க பெரிய திங்களின் ஒப்பற்ற இனிய கதிருக்கு; பழனம் வெண் தாமரை பனிக்கும் ஆறுபோல் - வயலில் உள்ள தாமரை வருந்தும் தன்மைபோல; குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார் - குழலிசையினும் மிக்க இனிய மொழியாரின் ஒப்பனைக்கு அஞ்சினோர்; தொழ நிமிர்ந்து அமரராய்த் துறக்கம் ஆள்வர் - பலரும் தொழுமாறு மிக்கு வானவராய்த் துறக்கத்தை ஆள்வர். 
 | 
| 
    (வி - ம்.) நிழல் - ஒளி. பழனம் - கழனி. பனித்தல் - வருந்துதல். கோலம் அஞ்சினார் என்றது, அவர் இயல்பாகவே விரும்புதற்குரியரல்லர், அவர் தம் கோலமே விரும்பச்செய்வது, அதனை அஞ்சினோர் என்பதுபட நின்றது. 
 | 
( 144 ) | 
வேறு
 | 
|  1556 | 
இன்னவா றுறுதி கூறி |   |  
|   | 
  யெரிமணி வயிர மார்ந்த |   |  
|   | 
பொன்னவிர் கலங்க ளெல்லாம் |   |  
|   | 
  பொலிவொடு புகன்று நீட்டிச் |   |  
|   | 
சென்மினீ ரென்று கூற |   |  
|   | 
  வலங்கொண்டு தொழுது சென்றான் |   |  
|   | 
வின்மரீஇ நீண்ட தோளான் |   |  
|   | 
  வெயிற்கட நீந்த லுற்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இன்ன ஆறு உறுதி கூறி - இங்ஙனம் நன்மையைக் கூறி; எரிமணி வயிரம் ஆர்ந்த பொன் அவிர் கலங்கள் எல்லாம் - ஒளிவிடும் மணியும் வயிரமும் பொருந்திய பொன் 
 |