கனகமாலையார் இலம்பகம் |
888 |
|
|
1565 |
வள்ளி வாரிய குழியின் | |
|
வளர்பொன்னும் வயிரமு மிமைக்குஞ் | |
|
சுள்ளி வேலியி னீங்கித் | |
|
துறக்கம்புக் கிடுமெனச் சூழ்ந்து | |
|
வெள்ளி வெண்டிரள் விசித்து | |
|
நிலத்தொடு தறிபுடைத் தவைபோற் | |
|
றுள்ளி வீழுய ரருவி | |
|
வனகிரி தோன்றிய தவணே. | |
|
(இ - ள்.) வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும் - வள்ளிக் கிழங்கை அகழ்ந்த குழியிலே பொன்னும் வயிரமும் ஒளிவிடுவதும்; சுள்ளி வேலியின் நீங்கி - மராமரத்தின் வேலியினின்றுந் தப்பி; துறக்கம் புக்கிடுமெனச் சூழ்ந்து - துறக்கத்திலே சென்று விடுமென எண்ணி; வெள்ளி வெண்திரள் விசித்து - வெள்ளிக் கம்பிகளைத் தலையிலே பூட்டி; நிலத்தொடு தறி புடைத்தவை போல் - நிலத்திலே தறியைப் புடைத்துக் காட்டினாற் போல்; துள்ளி வீழ் உயர் அருவி வனகிரி அவண் தோன்றியது - நாற்றிசையினும் துள்ளி வீழும் அருவிகளையுடையதுமான வனகிரி அங்கே தோன்றியது.
|
(வி - ம்.) பொன்னும் வயிரமும் இமைக்கும் வனகிரி, அருவிகளையுடைய வனகிரி என்க.
|
வள்ளி - ஒருவகைக் கிழங்கு. வாரிய - அகழ்ந்த. வனகிரி, வானுறவளர்தலின் மேலும் வளர்ந்து துறக்கத்தே புகாதபடி தடைசெய்தற் பொருட்டு வெள்ளிக் கம்பிகளை அதன் தலையிலே பூட்டி நிலத்தொடு கட்டிவைத்தாற்போலத் தோன்றின அதன் உச்சியினின்று வீழும் வெள்ளிய அருவிகள் என்க.
|
( 9 ) |
1566 |
அண்ண றான்செலு முன்னா | |
லணிமலர்ப் பூம்பொழி லதனுள் | |
வண்ண மாச்சுனை மாநீர் | |
மணிதெளித் தனையது ததும்பித் | |
தண்ணென் றாமரை கழுநீர் | |
நீலத் தாதவி ழாம்ப | |
லெண்ணில் பன்மலர் கஞலி | |
யினவண்டு பாண்முரன் றுளதே. | |
அணிகல வரவத் தாலு | |
மமிழ்துறழ் நாற்றத் தாலும் | |
பணிவருஞ் சிங்க நோக்கிற் | |
பணையெருத் துறழ நோக்கி | |
மணிமலர் நாகஞ் சார்ந்து | |
வழையொடு மரவ நீழற் | |
றுணிவருஞ் சாய னின்றா | |
டோன்றறன் கண்ணிற் கண்டான். | |
|
(இ - ள்.) அண்ணல் தான் செலும் முன் - சீவகன் செல்லும் வழியில் வனகிரிக்கு முன்னர்; அணி மலர்ப் பூம் பொழிலதனுள் - அழகிய மலர்களையுடைய மலர்க்காவிலே;
|