பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 905 

   மாலை - பவதத்தன் மாமி. அல்லல் செய்தேன் என்றது நின்பிரிவாலே அவரெல்லாம் பெரிதும் அல்லலுறாநின்றனர் என்றவாறு.

( 35 )
1592 உண்ணு நீர்வேட் டசைந்தே
  னெனவுரைப்பக் காட்டு ணாடி
நண்ணிப் பொய்கை தலைப்பட்டு
  நற்றா மரையி லையினுட்
பண்ணி நீர்கொண்டு வந்தேன்
  படாமு லைப்பா வாயென்
றண்ண லாற்றா தழுதழுது
  வெந்துருகி நைகின் றானே.

   (இ - ள்.) படா முலைப்பாவாய்! - சாயாத முலையையுடைய பாவையே!; உண்ணும் நீர்வேட்டு அசைந்தேன் என உரைப்ப - நீ குடிநீர் விழைந்து இளைத்தேன் என்று கூறியதாலே; காட்டுள்பொய்கை நாடி நண்ணித் தலைப்பட்டு - காட்டிலே பொய்கையிருக்குமிடம் தேடிக் கண்டுபிடித்தடைந்து; நல் தாமரை இலையினுள் பண்ணிநீர் கொண்டு வந்தேன் - அழகிய தாமரை இலையைக் கோலி அதனுள் நீரை ஏந்தி வந்தேன்; என்று - (நின்னைக் கண்டிலேன்,) என்று கூறி; அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றான் - பேதையாகிய அவன் அமைதியின்றி அழுது அழுது மனம் வெதும்பி உருகி நைகின்றான்.

   (வி - ம்.) அண்ணல் : இகழ்ச்சிக் குறிப்பு.

   உரைப்ப - நீ கூறுதலாலே என்க. தலைப்பட்டு - கண்டு. தாமரையிலையைப்பண்ணி அதனுள் நீர் கொண்டு வந்தேன் என்க. பண்ணுதல் - குடையாகக் கோலுதல்

( 36 )
1593 குழைகொள் வாண்முகத்துக் கோல்வளையைக்
  காணான் குழைந்தழு கின்ற
வழகன் சொல்லுமணி செய்கோதை
  காமமுங் கண்டுங் கேட்டு
முழவுத் தோளான் முறுவ
  லித்தீங் கேயிரு நீயென்
றிழையச் சொல்லி யிளையா
  னிளையானை யெய்தி னானே.

   (இ - ள்.) குழைகொள் வாள்முகத்துக் கோல் வளையைக் காணான் - குழையணிந்த ஒளிசெயும் முகத்தையும் திரட்சியுறும் வளையையும் உடையாளைக் காணானாகி; குழைந்து அழுகின்ற