| கனகமாலையார் இலம்பகம் | 
910  | 
 | 
  | 
| 
 போல்வார்; சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார் - மேலும் தம் கணவனின் துன்பத்தைத் தீர்ப்பார்கள். 
 | 
| 
    (வி - ம்.) சொல்லார் : முற்றெச்சம். வாழ்வார் : வினையாலணையும் பெயர், எழுவாயாய் நின்றது. காமனை : ஐ : அசை. இவர்கள் கற்புடை மகளிர். 
 | 
( 42 ) | 
|  1599 | 
அன்னணின் றோழி யையா |   |  
|   | 
  வவளென்னைக் கண்ட கண்ணாற் |   |  
|   | 
பின்னைத்தான் பிறரை நோக்காப் |   |  
|   | 
  பெருமட மாது தன்னை |   |  
|   | 
யென்னையா னிழந்து வாழு |   |  
|   | 
  மாறென விரங்கி னானுக் |   |  
|   | 
கன்னளோ வென்று நக்கா |   |  
|   | 
  னணிமணி முழவுத் தோளான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஐயா நின்தோழி அன்னள் - ஐயனே! உன் தோழி அத்தகையளே; அவள் என்னைக் கண்ட கண்ணால் - அவள் என்னைப் பார்த்த விழியினால்; தான் பிறரைப் பின்னை நோக்காப் பெருமடமாது - தான் மற்றவரைப் பிறகு பாராத பெருமைமிக்க இளமங்கை; தன்னை இழந்து யான் வாழும் ஆறு என்னை - அவளைப் பிரிந்து யான் வாழும் வகை எங்ஙனம்; என இரங்கினானுக்கு - என்று வருந்திய பவதத்தினின் பேதைமையைப் பார்த்து; அணிமணி முழவுத்தோளான் அன்னளோ என்று நக்கான் - அணியணிந்த அழகிய முழவனைய தோளானாகிய சீவகன் அத்தகையளோ! என்று நகைத்தான். 
 | 
| 
    (வி - ம்.) அன்னளோ என்றது யான் கூறியவற்றாலும் தெளிவு நிகழாமல் இவனை வருந்துந் தன்மையளோ என்றவாறு. நகை, பிறர் அறியாமைபற்றி நிகழ்ந்தது. இனி யாம் இவன் இடுக்கணுக்கு உதவி யானோம் என்று மனம் மகிழ்ந்தான் என்றுமாம். 
 | 
( 43 ) | 
வேறு
 | 
|  1600 | 
இனையல்வேண் டாவிம் மந்திரத்தை |   |  
|   | 
  யோதிநீ யொருவில் லேவள |   |  
|   | 
வனைய வெல்லை சென்றா |   |  
|   | 
  லியக்கி கொணர்ந் தருளுநீ |   |  
|   | 
புனைசெய் கோல்வளை யைக்கைப் |   |  
|   | 
  படுதியென் றாங்கவன் போதலு |   |  
|   | 
மனைய மாதரைக் கண்டாங் |   |  
|   | 
  கடிபுல்லி வீழ்ந்த ரற்றினான். |   | 
 
 
 |