பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 928 

1636 விண்டார்த் தேய்க்கும் வெம்பரி
  மான்றோ் விசயன்னென்
றுண்டா நின்றான் றன்புக
  ழூழி யுலகேத்த
வண்டார் சோலை வார்மண
  நாறப் புகுகின்றான்
கண்டான் சோ்ந்தான் காளையைக்
  கல்விக் கடலானே.

   (இ - ள்.) விண்டார் தேய்க்கும் வெம் பரிமான் தேர் விசயன் என்று - பகைவரை அழிக்கும் கொடிய குதிரை பூண்ட தேரையுடைய விசயன் என்று; தன் புகழ் ஊழி உலகு ஏத்த உண்டா நின்றான் - தன் புகழை ஊழிக்காலம் வரை உலகு புகழ நிலைபெற்றவன்; வண்டு ஆர் சோலைவார் மணம் நாறப் புகுகின்றான் - வண்டுகள் நிறைந்த பொழிலிலே மிகுமணம் கமழ்தலால் நுழைகின்றபோது; கல்விக் கடலான் காளையைக் கண்டான் சேர்ந்தான் - கல்விக் கடலானாகச் சீவகனைக் குறிப்பாற் கண்டு அருகிற் சென்றான்.

   (வி - ம்.) புகுகின்றான், கண்டான் : முற்றெச்சங்கள்.

   விண்டார் - பகைவர். உண்டாக என்பது உண்டா என ஈறு தொக்கு நின்றது. ஊழி உலகு ஏத்த உண்டாநின்றான் என மாறுக. காளை - சீவகன். கல்விக்கடலான் காளை என மாறுக.

( 80 )
1637 இந்நாட் டிவ்வூ ரிவ்விட
  மெய்தா ரிவண்வாழ்வா
ரெந்நாட் டெவ்வூ ரெப்பெய
  ராய்நீ யுரையென்றாற்
கந்நாட் டவ்வூ ரப்பெய
  ரல்லாப் பெயர்சொன்னான்
பொய்ந்நாட் டேனும் பொய்யல
  வாற்றாற் புகழ்வெய் யோன்.

   (இ - ள்.) இந்நாட்டு இவ்வூர் இவண் வாழ்வார் இவ்விடம் எய்தார் - இந்நாட்டிலே இவ்வூரிலே இப்பக்கத்தில்லே வாழ்கின்றவர் இங்கு வரமாட்டார்கள்; நீ எந்நாட்டு எவ்வூர் எப்பெயராய் உரை என்றாற்கு - நீ எந்த நாட்டிலே எவ்வூரிலே எப்பெயருடன் இருக்கின்றனை எனக் கூறு என்ற விசயனைப் பார்த்து; அந்நாட்டு அவ்வூர் அப்பெயர் அல்லாப் பெயர் - தன் நாடும் தன் ஊரும் தன் பெயரும் அல்லாத பெயர்களை; பொய்ந் நாட்டேனும்