கனகமாலையார் இலம்பகம் |
948 |
|
|
1668 |
அணுகி முன்னின்ற வநங்க | |
|
விலாசினி யங்கை கூப்பிப் | |
|
பிணைய னீட்டப் பெருந்தகை | |
|
யஃதே லான்முக நோக்கலுந் | |
|
துணையி றோகை யென்னங் | |
|
கைக்குத் தொங்கறொடுப் பாயுநீ | |
|
மணிசெய் மென்றோண் மருந்துநீ | |
|
யாருயிரு நீயே லென்றாள். | |
|
(இ - ள்.) அணுகி முன் நின்ற அநங்க விலாசினி அங்கை கூப்பிப் பிணையல் நீட்ட - அவ்வாறு நெருங்கி அவன் முன்னே நின்ற அநங்க விலாசினி அங்கை குவித்து வணங்கி மாலையை நீட்ட; பெருந்தகை அஃது ஏலான் முகம் நோக்கலும் - சீவகன் அதனை வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்த அளவிலே; துணை இல் தோகை என் நங்கைக்குத் தொங்கல் தொடுப்பாயும் நீ - (அவளும்) ஒப்பில்லாத மயிலாகிய என் தலைவிக்கு மாலை தொடுப்பாயும் நீயே; மணி செய் மென் தோள் மருந்தும் நீ - மணிக்கலன் புனைந்த மெல்லிய தோள் மெலிவுக்கு மருந்தும் நீயே; ஆருயிரும் நீ - சிறந்த உயிரும் நீயே; ஏல் என்றாள் - (ஆதலின்) இதனை வாங்கிக் கொள் என்றாள்.
|
(வி - ம்.) பெருந்தகை - அன்மொழி; சீவகன். ஏலான் - முற்றெச்சம், துணை - ஒப்பு. தோகையாகிய என் நங்கைக்கு என்க. தொங்கல் - மாலை. தோள் மருந்து - தோள் மெலிவு தீர்க்கும் மருந்து, ஏல் - ஏற்றுக்கொள்.
|
( 112 ) |
வேறு
|
1669 |
மன்னர் கோயி லுறைவார் | |
|
பொறிசெ றித்த மாண்பினரே | |
|
யென்ன வஞ்சி னாயென் | |
|
றவனைநக் காட்கஃ தன்றுகோதா | |
|
யின்ன கொள்கை யேற்கேலா | |
|
தென்ன விலங்கெ யிற்றினா | |
|
ளன்ன மன்ன நடையினா | |
|
டான்வ ருந்து மெனநோ்ந்தான். | |
|