|
இச் செய்யுளையும் அடுத்த செய்யுளையும், 'பொருவில் நாழிகை பூணுமாறும், செருவாளாட்டும் சேடகப் பிண்டியும் சாரியை விலக்கும் வேல்திரி வகையும், இடுக்கட்போதில் ஏமப் பூமியுள், வகுத்தவாயில் வகைவகை இவையென, ஒட்டும் பாய்த்துளும் கரந்தொருங் கிருக்கையும் செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்...பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி” என வரும் பெருங்கதையையும் (1-37, 31-43) ஒப்புக் காண்க.
|
( 120 ) |