250. | அன்றது அக் கடல் அளித்து அகல நின்று அளிதுஅரோ; சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்அரோ; வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல்அரோ; இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ. |
அளிது - இரங்கத்தக்கது. 3-5 சூழலுக்கு ஒவ்வாதன; சொல் தெளிவு இல்லாதன; பிழை வடிவு கொண்டு குழ(ம்)ப்பும் சொல்லாட்சி கொண்டன. ஐயரவர்கள் நூலகப் பதிப்பின் குறிப்பு மிகவும் பொருத்தம். அடையாளம் காட்டாமலே விட்ட வை.மு.கோ. வின் செயல் மிகமிகப் பொருத்தம். 251-253. இந்த நான்கு பாடல்களும் முன் வந்த ஐந்து மிகைப் பாடல்களின் தன்மை உடையனவே. 'சீர், தளை முதலியன பிறழ்ந்தும், பொருள் விளங்காமல் பதங்கள் சிதைந்தும் காணப்படுகின்றன' என்பது ஐயரவர்கள் நூலகப் பதிப்பின் விளக்கம். அப்பதிப்பு ஐந்து பாடல்கள்' என்கிறது; கம்பன் கழகம் நான்கையே அச்சிட்டுள்ளது. வை. மு. கோ. பதிப்பில் விடப்பட்டவை இவை 4-1, 2, 3, 4 |