2517. | முத்து இருத்தி அவ் இருந்தனைய மொய்ந் நகையொடும், சித்திரக் குனி சிலைக் குமரர், சென்று அணுகினார்- அத்திரிப் பெயர் அருந்தவன் இருந்த அமைதி, பத்திரப் பழுமரப் பொழில் துவன்று, பழுவம். |
சித்திரக் குனிசிலைக் குமரர் - அழகிய, வளைந்த வில்லேந்திய இராமலக்குவர்; முத்து இருத்தி அவ் இருந்து அனைய - முத்துக்களைப் பதித்து அவைஒருசேர இருந்தாற் போன்ற; மொய்ந்நகை யொடும் - நெருங்கிய பற்கள் கொண்டசீதையுடன்; அத்திரிப் பெயர் அருந்தவன் - அத்திரி என்னும் பெயருடைய செயற்கரியதவம் செய்த பெருமுனிவன்; இருந்த - தங்கியிருந்த; அமைதி -இடமாகிய; பத்திரப்பழுமரப் பொழில்- இலையும் பழமும் நிறைந்த மரங்கள்உள்ள சோலைகள்; துவன்று- நெருங்கி விளங்கும்; பழுவம் - வனத்தை; சென்றுஅணுகினார் - போய் அடைந்தனர். அத்திரி என்னும் முனிவர் பிரமகுமரர்களுள்ஒருவர் ஏழு முனிவர்களுள் முன்வைக்கப்படுபவரும் ஆவர். இவரை இராமன் சந்தித்தது வான்மீகத்தில்அயோத்தியா காண்ட முடிவில் உளது. வில்லுக்குச் சித்திரமாவது இராமலக்குவர் கையில்ஏந்தியிருத்தல். பழுமரம் ஆலமரமுமாம். பழுவம் உறையுளுமாம். 1 |