விராதன் எதிர்ப்படுதல் 2521. | எட்டொடு எட்டு மத மா கரி, இரட்டி அரிமா, வட்ட வெங் கண் வரை ஆளி பதினாறு, வகையின் கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒருகைத் தொட்ட முத் தலை அயில் தொகை, மிடல் கழுவொடே. |
எட்டொடு எட்டு - பதினாறு; மதமாகரி - மதங்கொண்ட பெரிய யானைகள்; இரட்டி அரிமா - அவற்றிற்கு இருமடங்காம் முப்பத்திரண்டு சிங்கங்கள்; வட்டவெங்கண் -வட்டமான கொடிய கண்களையுடைய; வரை ஆளி பதினாறு - மலையில் வாழும் பதினாறு யாளிகள்;வகையின் - தன் வகைமையால்; கிட்ட இட்டு - நெருங்கக் கோத்திட்டு; இடைகிடந்தன - இடையே நெருங்கிக் கிடந்தனவாக; செறிந்தது ஒருகைத் தொட்ட - திரண்டதான தன் ஒரு கையால் பிடித்த; முத்தலை அயில் தொகை - மூன்று தலைகளையுடையமிக்க கூர்மையுடன் கூடிய; மிடல் கழுவொடு - வலிமைமிக்க சூலாயுதத்துடன், ஏ -அசை. விராதன் உண்ண யானை முதலியவற்றைத் தன் சூலத்திற் கோத்து எளிதிற் பிடித்திருந்தான்.எட்டொடு எட்டு என்பதை அறுபத்து நான்கு என்பர் சிலர். தொட்ட - பெரிய எனும் பொருள் தரும்திசைச் சொல்லுமாம், ஆளி என்பது உறுப்புகளால் யானையும் சிங்கமும் சேர்ந்து சிறகும் கொண்டு காணப் பெறும் விலங்கு. 5 |